பதிவு செய்த நாள்
12 பிப்2020
23:35
சென்னை:‘‘நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், 8 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 192.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின் நிர்வாக இயக்குனர் என்.காமகோடி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 73 ஆயிரத்து, 640 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2018ம் ஆண்டின் இதே காலாண்டில், 66 ஆயிரத்து, 141 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் வைப்புத் தொகை, 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 39 ஆயிரத்து, 812 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டில், 35 ஆயிரத்து, 504 கோடி ரூபாயாக இருந்தது. இதே போல, வங்கி வழங்கிய கடன் தொகையின் அளவு, 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33 ஆயிரத்து, 828 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு, 30 ஆயிரத்து, 637 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் நிகர லாபம், 8 சதவீதம் உயர்ந்து, 192.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில், 178.10 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக் கடன், 2.91 சதவீதத்திலிருந்து, 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வாராக் கடன், 1.74 சதவீதத்திலிருந்து, 1.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. மூன்றாம் காலாண்டில், 650 வங்கி கிளைகள் இருந்தன. வரும் மார்ச் மாதத்திற்குள், 700 கிளைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு, காமகோடி கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|