பதிவு செய்த நாள்
13 பிப்2020
23:48
புதுடில்லி:மகிந்திரா இ.பி.சி., இரிகேஷன் நிறுவனத்தின் பங்குகள், இன்று தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
தேசிய பங்குச் சந்தை அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.ஏற்கனவே, இந்நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, வர்த்தகமாகி வரும் நிலையில், தேசிய பங்குச் சந்தையிலும் தற்போது பட்டியலிடப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சி யாக, தேசிய பங்குச் சந்தையிலும் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் ஆகும்.மகிந்திரா இ.பி.சி., நிறுவனம், மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமாகும். இந்நிறுவனம், இந்தியாவில் நுண் பாசன தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது.
இந்நிறுவனம், 1986ம் ஆண்டில் துவங்கப்பட்டது. பிரெஞ்ச் தொழில்நுட்ப உதவியுடன், இந்தியாவில் பாசனத்துக்கான பல்வேறு பொருட்களை வடிவமைத்து, தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|