பதிவு செய்த நாள்
14 பிப்2020
23:45
ஆமதாபாத்:நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர்மாறாக இருக்கிறது, விலையுயர்ந்த ஆடம்பர கார்களை தயாரிக்கும், ‘லம்போஹினி’ நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில், லம்போஹினி காரை வாங்குபவர்களில், 60லிருந்து, 65 சதவீதம் பேர், மாதத் தவணை திட்டத்தில் தான் வாங்குகின்றனர் என்கிறது இந்நிறுவனம்.மிகவும் விலை உயர்ந்த இந்த காரை, எல்லாராலும் வாங்கி விட முடியாது. மிகப்பெரிய தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் தான், இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.ஆனால், அவர்களில், 60 முதல், 65 சதவீதம் பேர், வாகன கடன் பெற்றே இந்த காரை வாங்குகின்றனர்.
இது குறித்து, ‘லம்போஹினி இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் சரத் அகர்வால் கூறிய தாவது:எங்கள் காரை வாங்குபவர்கள், பரம்பரை செல்வந்தவர்கள் அல்ல; அவர்கள் செல்வத்தை உருவாக்குபவர்கள். அவர்களுக்கு பணத்தின் மதிப்பு நன்றாக தெரியும். அவர்களிடம் பணமிருந்தாலும், 5 கோடி ரூபாய்க்கு எங்கள் காரை வாங்கும்போது, அனைத்தையும் கணக்கிடுகின்றனர்.
அப்படி ஒரு தொகையை, உடனே தொழிலில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். ஆனால், காரை கடனில் தான் வாங்குகின்றனர். 60 முதல், 65 சதவீதம் பேர், வாகன கடன் வாங்கித் தான் எங்கள் காரை வாங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|