பதிவு செய்த நாள்
18 பிப்2020
02:57
புதுடில்லி; ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.
எஸ்.பி.ஐ., வங்கியின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனம், கடந்த நவம்பரில், புதிய பங்குகள் வெளியீட்டுக்காக அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது.
இதையடுத்து, பரிசீலனைக்குப் பின் இப்போது, செபி அனுமதி வழங்கி உள்ளது. எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தின், 76 சதவீத பங்குகள், எஸ்.பி.ஐ., வங்கி வசம் உள்ளன; மீதி, கார்லைல் குழுமம் வசம் உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாய் திரட்ட, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில், எஸ்.பி.ஐ., வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார், அடுத்த சில மாதங்களில், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|