பதிவு செய்த நாள்
18 பிப்2020
03:00
மும்பை: –முதலீட்டு ஆலோசகர்களுக்கான, தகுதி சம்பந்தப்பட்ட விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்களின் ஆர்வத்தைப் பாதுகாக்கும் வகையில், முதலீட்டு ஆலோசகர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்க இருப்பதாக, செபி தெரிவித்துள்ளது. மேலும், முதலீட்டு ஆலோசகர்கள் வாங்கும் கட்டணத்துக்கு, அதிகபட்ச வரம்பை அறிமுகப்படுத்த இருப்பதாவும் தெரிவித்துள்ளது.மேலும், நிதி ஆலோசகர்கள், சொத்து ஆலோசகர்கள் என தங்களை அழைத்துக் கொள்ள வேண்டுமெனில், அவர்கள், முதலீட்டு ஆலோசகர்களாக பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், செபி தெரிவித்துள்ளது.
ஒரு தனிப்பட்ட ஆலோசகர், வினியோக சேவைகளை வழங்க முடியாது எனவும், நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் வினியோக சேவை ஆகிய நடவடிக்கைகளை தனித்தனியாக்க வேண்டும் எனவும், செபி தெரிவித்துள்ளது.பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஆகியவற்றுக்குப் பின், இந்த நடவடிக்கைகளை, செபி எடுத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|