பதிவு செய்த நாள்
19 பிப்2020
06:36
புதுடில்லி : தனியார் பங்கு முதலீடு மற்றும், துணிகர மூலதன முதலீடு ஆகியவை, கடந்த, 2019ம் ஆண்டில், 3.41 லட்சம் கோடியாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, இ.ஒய்., நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:மும்மடங்கு இந்தியாவில், தனியார் பங்கு முதலீடு மற்றும், துணிகர மூலதன முதலீடு ஆகியவை, இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த, 2019ம் ஆண்டில், 3.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இத்தகைய முதலீடுகள், இந்தியாவில் தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக அதிகரித்து வருகிறது.கடந்த, 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தனியார் பங்கு முதலீடு மற்றும், துணிகர மூலதன முதலீடு ஆகியவை, 28 சதவீதம் அதிகரித்து உள்ளது.
மேலும், ஒப்பந்த எண்ணிக்கையும், 35 சதவீதம் அதிகரித்துள்ளது.பிற துறைகளுடன் ஒப்பிடுகையில், உள்கட்டமைப்பு துறையில் தான் அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த, 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது, 2019ல் மும்மடங்கு அதிகமாகும்.நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, மொத்த தனியார் பங்கு மற்றும் துணிகர முதலீடுகளில், 30 சதவீதம் உள்கட்டமைப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவே, 2018ல், 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மதிப்பீட்டு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில், பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு துறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலீடு
ரிலையன்ஸ் ஜியோ டவர் சொத்துக்களை, புரூக்பீல்டு நிறுவனம், 26 ஆயிரத்து, 270 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின், ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் நிறுவனத்தில், 13 ஆயிரத்து,490 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேபோல், அலிபாபா மற்றும் சாப்ட்பேங்க் நிறுவனங்கள், பேடிஎம் நிறுவனத்தில், 7,100 கோடி ரூபாய் முதலீட்டை செய்துள்ளன.மதிப்பீட்டு ஆண்டில், 710 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலாக செய்யப்பட்ட முதலீடுகள் எண்ணிக்கை, 111 ஆகும்.
இதில் தனியார் பங்கு, துணிகர முதலீடுகள், 73 சதவீதமாகும்.ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்ட மொத்த மூதலீடு, மதிப்பீட்டு ஆண்டில், 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில், 46 ஆயிரத்து, 150 கோடி ரூபாயாக இருந்த முதலீடு, 2019ல், 56 ஆயிரத்து, 90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தனியார் பங்கு மற்றும், துணிகர மூலதன முதலீடுகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் முதன் முறையாக பைஅவுட்ஸ் எனும், நிறுவனங்களை தாங்களே நிர்வகிக்கும் அளவிலான முதலீடுகளை செய்யும் முறை அதிகரித்துள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இம்முறையிலான ஒப்பந்தங்கள், 56 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் துறை ஒப்பந்தங்கள் (2019) மதிப்பு (ரூபாய் கோடிகளில்) (2019) ஒப்பந்தங்கள்(2018) மதிப்பு(ரூபாய் கோடிகளில்) (2018) தொழில்நுட்பம் 147 27,690 125 26,980லைப் சயின்சஸ் 69 17,750 60 12,070உணவு, வேளாண்மை 83 6,255 42 4,594
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|