பதிவு செய்த நாள்
19 பிப்2020
06:37
புதுடில்லி : மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக, அரசு நிதிப் பற்றாக்குறை இலக்கை தவறவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 3.8 சதவீதமாக உள்ளது. இது, 3.3 சதவீதமாக இருப்பதற்கு முன்பு திட்டமிடப்பட்டது.தற்போது, அடுத்து வரவிருக்கும் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை, 3.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் என்றும், அது குறித்து சந்தேகப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: கார்ப்பரேட் பத்திரங்களுக்கான வரம்புகளை,9 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வரப்போகின்றன.
மேலும், இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளிலிருந்து, கார்ப்பரேட் பத்திரங்கள் மூலம் அதிக நிதிகளை பெறத்துவங்கி உள்ளன. அரசு நிச்சயம் நிதிப் பற்றாக்குறை இலக்கை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|