பதிவு செய்த நாள்
20 பிப்2020
07:13
புதுடில்லி : கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தொலைதொடர்பு துறை, மிகவும் சிக்கலில் இருப்பதாகவும், அரசாங்கம், அதன் நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.
நேற்று, நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் கூறியதாவது:கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தொலைதொடர்பு துறை மிகுந்த அழுத்தத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அரசாங்கம், அதன் நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நிதியமைச்சக அதிகாரிகளுடனான சந்திப்பில், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் குறித்த விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படவில்லை.ஏர்டெல், ஏற்கனவே நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக அதன் திட்டங்கள் குறித்து அறிவித்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, 10 ஆயிரம் கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சுனில் மிட்டல், இதற்கு முன் தொலைதொடர்பு அதிகாரிகளைச் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, நிதியமைச்சக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.இதேபோல், கடந்த செவ்வாயன்று, தொலைதொடர்பு அதிகாரிகளை சந்தித்த, வோடபோன் ஐடியா நிறுவன தலைவர் மோகன் குமார மங்கலம் பிர்லா, அதன் பின், நிதியமைச்சக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.இருப்பினும், இவர்கள் இருவரும் சேர்ந்து அதிகாரிகளை சந்தித்தனரா; அல்லது தனித்தனியாக சந்தித்தனரா என்பது தெரியவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|