இக்கட்டில் இந்திய வாகன துறை; ஆய்வறிக்கை சொல்லும் சீன சிக்கல்கள் இக்கட்டில் இந்திய வாகன துறை; ஆய்வறிக்கை சொல்லும் சீன சிக்கல்கள் ...  ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம்  மார்ச் 2ல் பங்கு வெளியீடு ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம் மார்ச் 2ல் பங்கு வெளியீடு ...
அரசு கவனம் செலுத்தணும்: சுனில் மிட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
07:13

புதுடில்லி : கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தொலைதொடர்பு துறை, மிகவும் சிக்கலில் இருப்பதாகவும், அரசாங்கம், அதன் நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.

நேற்று, நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் கூறியதாவது:கடந்த மூன்றரை ஆண்டுகளாக, தொலைதொடர்பு துறை மிகுந்த அழுத்தத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அரசாங்கம், அதன் நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நிதியமைச்சக அதிகாரிகளுடனான சந்திப்பில், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் குறித்த விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படவில்லை.ஏர்டெல், ஏற்கனவே நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக அதன் திட்டங்கள் குறித்து அறிவித்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, 10 ஆயிரம் கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுனில் மிட்டல், இதற்கு முன் தொலைதொடர்பு அதிகாரிகளைச் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, நிதியமைச்சக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.இதேபோல், கடந்த செவ்வாயன்று, தொலைதொடர்பு அதிகாரிகளை சந்தித்த, வோடபோன் ஐடியா நிறுவன தலைவர் மோகன் குமார மங்கலம் பிர்லா, அதன் பின், நிதியமைச்சக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.இருப்பினும், இவர்கள் இருவரும் சேர்ந்து அதிகாரிகளை சந்தித்தனரா; அல்லது தனித்தனியாக சந்தித்தனரா என்பது தெரியவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)