பதிவு செய்த நாள்
21 பிப்2020
02:46
புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து மாநிலங்களிடமும், இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கமான, ஐ.சி.இ.ஏ., கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: மொபைல் போன்கள் மீதான, ஜி.எஸ்.டி.,யை தற்போதைய, 12 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டாம் என, மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும், வரி அதிகரிப்புக்கு ஆதரவு தர வேண்டாம் என, அனைத்து பெரிய மாநில அரசுகளின் முதல்வர்களுக்கும், எழுத்து மூலம் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி., அதிகரித்தால் அது, ‘டிஜிட்டல் இந்தியா’ நோக்கத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். மேலும், பல்வேறு சேவைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும், மொபைல் போன் சந்தையின் தேவை அதிகரித்து வருகிறது. இது, 2013 – 14ல், 57 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2018 – 19ல், 1.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 315 சதவீத வளர்ச்சியாகும்.
இந்நிலையில், மொபைல் போன் மீதான வரியை அதிகரிப்பது, வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறைக்கு அபராதம் விதிப்பது போலாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|