பதிவு செய்த நாள்
25 பிப்2020
05:47
புதுடில்லி: ‘அந்தோணி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச், 4ம் தேதி துவங்குகிறது.
இந்நிறுவனம், நாட்டில் உள்ள முக்கியமான, ஐந்து திடக்கழிவு மேலாண்மை மற்றும் சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த, 17 ஆண்டுகளாக இந்நிறுவனம், இத்துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, நாடு முழுக்க இருக்கும் நகராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், 300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், புதிய பங்குகளை வெளியிட உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 43.5 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், கிட்டத்தட்ட, 250 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள் கைவசம் இருக்கும், 94.42 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. மார்ச், 4ம் தேதி அன்று துவங்கும் இந்த பங்கு வெளியீடு, 6ம் தேதியன்று நிறைவு பெறுகிறது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஈக்யுரியஸ் கேப்பிட்டல்’ நிறுவனம் நிர்வகிக்கிறது. கடந்த ஜனவரி, 1ம் தேதி நிலவரப்படி, அந்தோணி நிறுவனத்தின் கைவசம், 25 திட்டங்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|