பதிவு செய்த நாள்
25 பிப்2020
05:49
மும்பை: ‘கொரோனா’ வைரஸ் தாக்கம், சீனாவுக்கும் வெளியே வேகமாக பரவத் துவங்கி இருப்பதால், அதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவைச் சந்தித்தன.சீனாவை மட்டுமின்றி, பிற நாடுகளிலும், கொரோனா வைரஸ் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, உலக பங்குச் சந்தைகளில், முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்க துவங்கி இருக்கின்றனர்.
இதன் தாக்கம், நேற்று இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 807 புள்ளிகள் சரிவைக் கண்டது. இது, 1.96 சதவீத சரிவாகும். இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 251 புள்ளிகள் சரிவைக் கண்டது. இது, 2.08 சதவீத சரிவாகும். சென்செக்ஸ், 30ல் உள்ள அனைத்து
நிறுவனப் பங்குகளுமே சரிவைக் கண்டன. குறிப்பாக, டாடா ஸ்டீல், 6.39 சதவீதம் சரிவைக் கண்டது. டாடா ஸ்டீலை அடுத்து, ஓ.என்.ஜி.சி., மாருதி நிறுவனப் பங்குகளும் சரிந்தன. பன்னாட்டு நிதியம், ஏற்கனவே பலகீனமாக இருக்கும் உலகப் பொருளாதாரம், மேலும் பாதிப்புக்கு ஆளாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|