பதிவு செய்த நாள்
25 பிப்2020
05:53
புதுடில்லி: தொலைதொடர்பு நிறுவனங்களை யாரும் கொல்ல விரும்பவில்லை என, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.
தொலைதொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு, 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியதிருக்கும் நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாட்டில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களை, யாரும் கொல்ல விரும்பவில்லை. இது குறித்து, நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமாக, இன்னும் அரசிடமிருந்து எஸ்.பி.ஐ.,யிடம் கருத்துகள் எதுவும் கேட்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.எஸ்.பி.ஐ., வங்கிக்கு, தொலைதொடர்பு நிறுவனங்களிடமிருந்து, கடன் பாக்கி, 29 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. மேலும், இந்நிறுவனங்களுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|