பதிவு செய்த நாள்
28 பிப்2020
00:55
புதுடில்லி: ‘‘சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவதைப் போல, இந்தியப் பொருளாதாரத்திலும் வெளிச்சம் தெரியத் துவங்கியுள்ளது,’’ என, ‘வேதாந்தா’ நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியப் பொருளாதாரம், 11 ஆண்டு காலத்தில் இல்லாத மோசமான நிலையிலிருந்து, விரைவில் மீண்டெழும். சுரங்கப் பாதையின் முடிவில், நான் வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.அரசு, கட்டுமான உள்கட்டமைப்புகளுக்கு செலவு செய்வதுடன் நில்லாமல், நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.மேலும், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்களிலும் பங்கு விலக்கலை மேற்கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் விதிமுறைகளில் மட்டுமின்றி, வணிகங்களுக்கான அனைத்து விதிமுறைகளும் தளர்த்தப்பட வேண்டும்.மேலும் கச்சா எண்ணெய், தாமிரம் உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.வருவாய், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்படும் வரை, உற்பத்தியைத் தொடர நிறுவனங்களுக்கு அரசு அனுமதிக்க வேண்டும். ஆனால், எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அது சொல்லக்கூடாது.
அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் தன் பங்குகளை விற்க வேண்டும். அவற்றை தொழில் முறையில் சிறந்த நிர்வாகக் குழு நடத்த வேண்டும்.பொதுத் துறை நிறுவனங்கள் தற்போது செய்வதை விட, மூன்று மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.ஒரு பொதுத் துறை வங்கியின் சந்தை மதிப்பு, 7,100 கோடி ரூபாயாக இருக்கும்போது, அதே அளவிலான தனியார் வங்கியின் சந்தை மதிப்பு, 10 மடங்கு அதிகமாக இருக்கிறது.
ஏனெனில், பொதுத் துறை வங்கிகள், அரசு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அது, மாற வேண்டும். இந்தியா மிகவும் குறைவான வரியை கொண்ட நாடு. ஜனநாயக நாடுகளில் யாராவது தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இந்தியா மிகவும் சிறந்த இடமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|