ஐந்து நாடுகள்; அட்டகாசமான வாய்ப்புகள்: இந்திய வாகன துறையினரின் புதிய பார்வை ஐந்து நாடுகள்; அட்டகாசமான வாய்ப்புகள்: இந்திய வாகன துறையினரின் புதிய ... ...  உணவு வினியோக வணிகம் அமேசானின் அடுத்த அவதாரம் உணவு வினியோக வணிகம் அமேசானின் அடுத்த அவதாரம் ...
‘எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அரசு சொல்லக் கூடாது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
00:55

புதுடில்லி: ‘‘சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவதைப் போல, இந்தியப் பொருளாதாரத்திலும் வெளிச்சம் தெரியத் துவங்கியுள்ளது,’’ என, ‘வேதாந்தா’ நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இந்தியப் பொருளாதாரம், 11 ஆண்டு காலத்தில் இல்லாத மோசமான நிலையிலிருந்து, விரைவில் மீண்டெழும். சுரங்கப் பாதையின் முடிவில், நான் வெளிச்சத்தைப் பார்க்கிறேன்.அரசு, கட்டுமான உள்கட்டமைப்புகளுக்கு செலவு செய்வதுடன் நில்லாமல், நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.மேலும், பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்களிலும் பங்கு விலக்கலை மேற்கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் விதிமுறைகளில் மட்டுமின்றி, வணிகங்களுக்கான அனைத்து விதிமுறைகளும் தளர்த்தப்பட வேண்டும்.மேலும் கச்சா எண்ணெய், தாமிரம் உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரமாகச் செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.வருவாய், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்படும் வரை, உற்பத்தியைத் தொடர நிறுவனங்களுக்கு அரசு அனுமதிக்க வேண்டும். ஆனால், எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அது சொல்லக்கூடாது.

அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் தன் பங்குகளை விற்க வேண்டும். அவற்றை தொழில் முறையில் சிறந்த நிர்வாகக் குழு நடத்த வேண்டும்.பொதுத் துறை நிறுவனங்கள் தற்போது செய்வதை விட, மூன்று மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.ஒரு பொதுத் துறை வங்கியின் சந்தை மதிப்பு, 7,100 கோடி ரூபாயாக இருக்கும்போது, அதே அளவிலான தனியார் வங்கியின் சந்தை மதிப்பு, 10 மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஏனெனில், பொதுத் துறை வங்கிகள், அரசு அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அது, மாற வேண்டும். இந்தியா மிகவும் குறைவான வரியை கொண்ட நாடு. ஜனநாயக நாடுகளில் யாராவது தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இந்தியா மிகவும் சிறந்த இடமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)