பதிவு செய்த நாள்
28 பிப்2020
00:59
புதுடில்லி: ஐந்தாவது நாளாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளன. ‘கொரோனா’ வைரஸ் மிகப் பெரும் தொற்றுநோயாக மாறும் என்ற அச்சத்தால், உலக சந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின.
இதன் தாக்கம் நேற்று, இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.வைரஸ் தாக்குதல் மற்றும் முன்பேர வணிக கணக்கு முடிப்பு ஆகிய காரணங்களால், சந்தைகள், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்து சரிவை கண்டன.மேலும், நேற்று வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய நிறுவனப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.மும்பை பங்குச் சந்தையின், ’சென்செக்ஸ்’ வர்த்தகத்தின் இடையே, 466 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில், 143 புள்ளிகள் சரிந்து நிலை பெற்றது. இது, 0.36 சதவீத சரிவாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ’நிப்டி’யும், 0.39 சதவீத சரிவை சந்தித்தது.கடந்த ஐந்து நாட்களில் மட்டும், சென்செக்ஸ், 1577.34 புள்ளிகளை இழந்துள்ளது.
நிப்டி, 492.60 புள்ளிகளை இழந்துள்ளது.நேற்றைய வர்த்தகத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 2.61 சதவீதம் சரிந்து, அதிக இழப்பை சந்தித்தது.இதையடுத்து, எச்.சி.எல்., டெக், மகிந்திரா அண்டு மகிந்திரா, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட நிறுவனப் பங்குகள், அதிக சரிவைக் கண்டன.மாறாக, ‘சன் பார்மா, டைட்டன், ஆக்சிஸ் பேங்க், ஏஷியன் பெயின்ட்’ ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|