தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் அன்னிய செலாவணி இருப்பு ...  பாக்கி தொகையை கட்டி முடித்த ஏர்டெல்; சுயமதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கை, ‘சரி’ செய்தது பாக்கி தொகையை கட்டி முடித்த ஏர்டெல்; சுயமதிப்பீட்டின் அடிப்படையில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நாளை முதல் துவங்குகிறது எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் ஐ.பி.ஓ., பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2020
00:33

புதுடில்லி: பங்கு சந்தை முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்குகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகளவில் முதலீட்டாளர்களிடையே அச்ச உணர்வு அதிகரித்து சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் புதிய பங்குகளை வெளியிடுகிறது.

எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. நாளை துவங்கும் இந்த வெளியீடு, 5ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 750 – 755 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், தகுதி வாய்ந்த அதன் ஊழியர்களுக்கு, ஒரு பங்கின் விலையில், 75 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பங்குச் சந்தையில் இது, ஐந்தாவது மிகப்பெரிய பங்கு வெளியீடாகும். இப்பங்கு வெளியீட்டின்போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்களின், 13.05 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.

எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தில், எஸ்.பி.ஐ., வங்கியிடம், 74 சதவீத பங்குகள் உள்ளன. ‘கார்லைல்’ குழுமத்தின் வசம், 26 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, துணிகர முதலீட்டாளர்களிடமிருந்து, 2,769 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது. 74 துணிகரமுதலீட்டாளர்களிடமிருந்து இந்த தொகை பெறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)