பதிவு செய்த நாள்
01 மார்2020
00:33
புதுடில்லி: பங்கு சந்தை முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்குகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகளவில் முதலீட்டாளர்களிடையே அச்ச உணர்வு அதிகரித்து சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் புதிய பங்குகளை வெளியிடுகிறது.
எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. நாளை துவங்கும் இந்த வெளியீடு, 5ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 750 – 755 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், தகுதி வாய்ந்த அதன் ஊழியர்களுக்கு, ஒரு பங்கின் விலையில், 75 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பங்குச் சந்தையில் இது, ஐந்தாவது மிகப்பெரிய பங்கு வெளியீடாகும். இப்பங்கு வெளியீட்டின்போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்களின், 13.05 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தில், எஸ்.பி.ஐ., வங்கியிடம், 74 சதவீத பங்குகள் உள்ளன. ‘கார்லைல்’ குழுமத்தின் வசம், 26 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, துணிகர முதலீட்டாளர்களிடமிருந்து, 2,769 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது. 74 துணிகரமுதலீட்டாளர்களிடமிருந்து இந்த தொகை பெறப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|