பதிவு செய்த நாள்
01 மார்2020
00:37
கோவை: ‘‘நாடு முழுவதும் ஏப்., மாதம் முதல் பி.எஸ்., 6 ரக எரிபொருள் வினியோகம் செய்யப்படும்,’’ என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்ஜிவ் சிங் கூறினார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வரும் ஏப்., மாதம் முதல் பி.எஸ்., 6 ரக எரிபொருளை எண்ணெய் நிறுவனங்கள் வினியோகம் செய்யவுள்ளன.பி.எஸ்., 6 ரக எரிபொருளில் சல்பர் அளவு குறைவாக இருக்கும் என்பதால் காற்றின் மாசுபாடு மேலும் குறைக்கப்படும். சென்னையில் ஏற்கனவே பி.எஸ்., 6 ரக எரிபொருள் விற்பனையை துவங்கிவிட்டோம்
.பி.எஸ்., 4 ரக எரிபொருளை பி.எஸ்., 6 ரகமாக கொண்டுவர, எண்ணெய் நிறுவனங்கள், 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.அதில், இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டும், 17 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மூலமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது பெரிய சாதனை.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|