பதிவு செய்த நாள்
01 மார்2020
00:38
நியூயார்க்; ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமல்ல, உலகளவிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
அமெரிக்காவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3,000 புள்ளிகள் சரிந்து உள்ளன. இந்த மாதிரி நடக்கும் என, ஜோசியர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. வேத ஜோசியத்தின் கணிப்பில் ஜோசியர் ஒருவர், பிப்., 7ம் தேதி, ‘யு -டியூப்’ ஒன்றில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில், ‘அமெரிக்கா பங்குச் சந்தைகள், பிப்., 7 அன்று, 29 ஆயிரம் புள்ளிகளை கடந்து உச்சம் தொட்டது. இந்த ஏற்றம் தொடருமா என கேட்டால், தொடராது என்று தான் கூறுவேன். ஒரு மிகப் பெரிய சரிவு நிகழப் போகிறது.அமெரிக்காவின் டோ ஜோன்ஸ் பங்குச் சந்தையில் ஒரே நாளில், 2,000 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளது. இந்த சரிவு, பிப்., 28, மார்ச் 9, மார்ச் 17, மார்ச் 20 முதல் ஏப்., 8 ஆகிய தேதிகளில் நிகழக்கூடும்’ என தெரிவித்துள்ளார்.இவர் சொன்னது ஏறக்குறைய நடந்துள்ளது.
அமெரிக்காவின் டோ ஜோன்ஸ் பங்குச் சந்தையில், பிப்., 24 முதல் 28 வரை, ஐந்து நாட்களில், 3,583 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|