பதிவு செய்த நாள்
01 மார்2020
09:40
அந்த காலத்தில் பாடம் படிப்பது, சாப்பிடுவது, துாங்குவது எல்லாமே தரையில்தான். இதனால் உடல் நலமாக இருந்தது. பர்சும் பத்திரமாக இருந்தது. சேமிப்பும், உடல் நலமும் கூடியது.
காலங்கள் மாறியதில் பத்தமடை பாய்கள், பரணில் துாங்குகின்றன. அப்போதெல்லாம் கட்டில், பீரோ செய்ய வேண்டுமென்றாலும் கூட நம் வீட்டுக்கென ஒரு தச்சர் இருப்பார். அவர் வீட்டுக்கு வந்து பல நாட்கள் தங்கி மரங்களை இழைத்து இழைத்து கட்டில், பீரோ, டேபிள் இப்படி மரச்சாமான்களை செய்து தருவார். ஒரு காலத்தில் ஒரு சிலரின் வீடுகளில் மட்டுமே இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள், வார்ட்ரோப், டேபிள், சேர் இன்று இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு வந்து விட்டது. பல ‘ஆர்கனைஸ்டு’ (ORGANISED) பர்னிச்சர் கம்பெனிகள் வந்தன. இந்த துறையின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 1,12,000 லட்சம் கோடி ரூபாய். இன்னும் ஐந்தாண்டுகளில் இது 1,75,000 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதையறிந்து கொண்ட பெரிய கம்பெனிகள் படபடவென ரெடிமேட் பர்னிச்சர் விற்பனை என களம் இறங்கியுள்ளன. ப்ளைவுட் அல்லது விலை குறைந்த ரப்பர் வுட் ஆகியவைகளிலிருந்து பர்னிச்சர்களை தயாரித்து குறைந்த விலையில் அளிக்கின்றன. இந்த மார்க்கெட் மதிப்பு தெரிந்து தான் உலகத்தின் பெரிய பர்னிச்சர் ரீடெய்லரான ஐகியா (IKEA) இந்தியாவில் களம் இறங்கியிருக்கிறது.புதுமை பூட்டுவீடுகளில் இருக்கும் பூட்டுக்களில் உள்ள ஒரு பெரிய பிரச்னையே, அதனை கள்ளச்சாவி கொண்டு திறந்து விடலாம் என்பதே. அதனால் தற்போது பூட்டுக்களில் வீட்டின் உரிமையாளர்கள் கைரேகையை வைத்து திறக்கும்படியாக பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன. கனடாவை சேர்ந்த TAPPLOCK என்ற கம்பெனி இதனை கண்டுபிடித்துள்ளது.
–சேதுராமன் சாத்தப்பன்–
சந்தேகங்களுக்கு:
sethuraman.sathappan@gmail.com,
www.startupbusinessnews.com,
98204 – 51259.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|