பதிவு செய்த நாள்
01 மார்2020
23:38
ஆதார் எண்ணுடன், பான் கார்டு இணைப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கெடு, மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிலையில், இந்த காலத்திற்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கத்
தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்க்கலாம்.
பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான நடவடிக்கையை மார்ச் மாதத்திற்குள்
செய்யாவிட்டால், குறிப்பிட்ட பான் கார்டு செயலிழக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு செயலிழந்துவிட்டால், பான் கார்டு சமர்ப் பித்து மேற்கொள்ள வேண்டிய நிதி
பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது. பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு எண்ணை சமர்ப்பிப்பது அவசியம்.பான் கார்டு செயலிழப்பது என்பது பான் கார்டு
இல்லாமல்இருப்பது போன்றது.
எனினும், ஏப்ரல் மாதத்திற்கு பின், ஆதாருடன் பான் கார்டை இணைத்தால், அன்று முதல் பான் கார்டு செயலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் முதல், கார்டு இணைக்கப்படும் நாள் வரை அது செயலிழந்து இருக்கும். பான் கார்டு இல்லாத சூழலில் பொருந்தும் அபராதமும் விதிக்கப்படலாம். எனவே, குறித்த அவகாசத்திற்குள் இதை செய்து விடுவது நல்லது என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|