பதிவு செய்த நாள்
05 மார்2020
23:52
புதுடில்லி:வர்த்தக சரிவு, வருவாய் சரிவு ஆகியவற்றுடன் கடன் பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வேறுவழி இன்றி, செயல்பாட்டை நிறுத்தியது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்.
இந்நிலையில், ’ஆர்காம்’ என்றழைக்கப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் பாக்கியை தீர்த்து வைப்பதற்காக, இந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய கடன் கொடுத்தவர்கள் ஒப்புதல் தந்துள்ளனர்.
இந்தச் சொத்து விற்பனை மூலம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களுக்கு, 23,000 ரூபாய் அளவிலான கடன் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.இந்த திட்டத்தினால், சீன வங்கிகளுக்கு 5,500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அவற்றின் அசலில், 55 சதவீதம் கிடைக்கும்.
ஆர்காம் நிறுவனத்துக்கு மொத்தம், 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில், இந்த சொத்து விற்பனைகள் மூலம், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தீர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|