எஸ்.இ.இசட்., அமைக்க மத்திய அரசு அனுமதி எஸ்.இ.இசட்., அமைக்க மத்திய அரசு அனுமதி ...  அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரிப்பு அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரிப்பு ...
பாக்கித் தொகை குறித்து ‘வோடபோன்’ சுயமதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2020
23:44

புதுடில்லி:மத்திய அரசுக்கு, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில், 21 ஆயிரத்து, 533 கோடி ரூபாய் செலுத்த வேண்டியதிருப்பதாக, ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்நிறுவனம், அதன் சுயமதிப்பீட்டின் அடிப்படையில், இந்த தொகை மட்டுமே செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்து உள்ளது.ஆனால், அரசு தரப்பில், வோடபோன் ஐடியா, 53 ஆயிரத்து, 39 கோடி ரூபாயும்; ‘ஏர்டெல்’ 35 ஆயிரத்து, 586 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இப்போது, வோடபோன் நிறுவனம், அதன் சுயமதிப்பீட்டின் அடிப்படையில், 21 ஆயிரத்து, 533 கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியதிருப்பதாக தெரிவித்து உள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம், முதல் தவணையாக, 10 ஆயிரம் கோடி ரூபாயையும், இரண்டாவது தவணையாக, 8,004 கோடி ரூபாயையும் செலுத்தி, அத்துடன் செலுத்த வேண்டிய முழு பாக்கித் தொகையையும் செலுத்தி விட்டதாக, தெரிவித்தது.


வோடபோன் நிறுவனம்,21 ஆயிரத்து, 533 கோடி ரூபாயில், 2006 – -07 நிதியாண்டிலிருந்து, 2018 –19 நிதியாண்டு வரையிலான காலத்துக்கான அசல், 6,854 கோடி ரூபாயும், நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரையிலான வட்டி தொகையும் அடங்கும் என, தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, வோடபோன் குழும தலைமை செயல் அதிகாரியான நிக் ரீடு, தொலைதொடர்பு துறை அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)