பதிவு செய்த நாள்
06 மார்2020
23:44
புதுடில்லி:மத்திய அரசுக்கு, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில், 21 ஆயிரத்து, 533 கோடி ரூபாய் செலுத்த வேண்டியதிருப்பதாக, ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனம், அதன் சுயமதிப்பீட்டின் அடிப்படையில், இந்த தொகை மட்டுமே செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்து உள்ளது.ஆனால், அரசு தரப்பில், வோடபோன் ஐடியா, 53 ஆயிரத்து, 39 கோடி ரூபாயும்; ‘ஏர்டெல்’ 35 ஆயிரத்து, 586 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது, வோடபோன் நிறுவனம், அதன் சுயமதிப்பீட்டின் அடிப்படையில், 21 ஆயிரத்து, 533 கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியதிருப்பதாக தெரிவித்து உள்ளது. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம், முதல் தவணையாக, 10 ஆயிரம் கோடி ரூபாயையும், இரண்டாவது தவணையாக, 8,004 கோடி ரூபாயையும் செலுத்தி, அத்துடன் செலுத்த வேண்டிய முழு பாக்கித் தொகையையும் செலுத்தி விட்டதாக, தெரிவித்தது.
வோடபோன் நிறுவனம்,21 ஆயிரத்து, 533 கோடி ரூபாயில், 2006 – -07 நிதியாண்டிலிருந்து, 2018 –19 நிதியாண்டு வரையிலான காலத்துக்கான அசல், 6,854 கோடி ரூபாயும், நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரையிலான வட்டி தொகையும் அடங்கும் என, தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, வோடபோன் குழும தலைமை செயல் அதிகாரியான நிக் ரீடு, தொலைதொடர்பு துறை அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|