பதிவு செய்த நாள்
07 மார்2020
23:32
புதுடில்லி:இந்திய வங்கித் துறையை நிர்வகிப்பதில் இருக்கும் குறைபாடுகளை, யெஸ் பேங்கின் நிலைமை வெளிச்சமிட்டு காட்டியிருப்பதாக, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம், தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:யெஸ் பேங்கில் உள்ள சிக்கல்களை சமாளிப்பது மற்றும் வாடிக்கையாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் உறுதியளிப்பது ஆகியவற்றில் அரசு தோல்வியுற்றால், ஏற்கனவே மோசமான செயல்பாட்டு சூழலில் இருக்கும் வங்கித் துறைக்கு, அது மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.யெஸ் பேங்க் கட்டுப்பாட்டை, ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது,
வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இருப்பினும், இதில் ஓர் அபாயம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியால், வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டை வேறு பாதுகாப்பான நிறுவனங்களுக்கு மாற்றத் துாண்டும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும், இது பணப்புழக்க சிக்கலையும் அதிகரிக்கக் கூடும். குறிப்பாக, சிறிய தனியார் வங்கிகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
கூடவே, உள்நாட்டு மொத்தக் கடன் சந்தைகளிலும் நம்பிக்கை குறையக் கூடும். இதன் விளைவாக, நிதி நிலைமைகள் மேலும் இறுக்கமடையக் கூடும். இவ்வாறு, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|