பதிவு செய்த நாள்
07 மார்2020
23:34
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது ஏப்ரல் முதல், டிசம்பர் வரை, 3,676 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 2.72 லட்சம் கோடி ரூபாய்.கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வந்த அன்னிய நேரடி முதலீடு, 3,349 கோடி டாலர். இது, இந்திய மதிப்பில், 2.48 லட்சம் கோடி ரூபாய்.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் முதல், ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 10 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில் அதிகபட்ச முதலீட்டை, சேவைகள் துறை ஈர்த்துள்ளது. இத்துறையில், 652 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது, 48 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இதையடுத்து, கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை, 29 ஆயிரம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது.இதையடுத்து, தொலை தொடர்பு, வர்த்தகம், வாகனம் ஆகிய துறைகள், அதிகளவிலான அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|