அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரிப்பு அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரிப்பு ...  தனியார் வசமாகிறது, ‘பாரத் பெட்ரோலியம்’பங்குகள் வாங்க விரும்பும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு தனியார் வசமாகிறது, ‘பாரத் பெட்ரோலியம்’பங்குகள் வாங்க விரும்பும் ... ...
கடனை அடைக்கும் திட்டத்தை ‘ஆர்காம்’ நிறுவனம் சமர்ப்பித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2020
23:35

புதுடில்லி:‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், அதன் கடன்களை அடைப்பதற்கான தீர்மான திட்டத்தை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது.


இந்த திட்டத்தின்படி, ‘ஆர்காம்’ என்றழைக்கப்படும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அதன் சொத்துக்களை விற்பதன் மூலம், 23 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட இருப்பதாக தெரிய வந்துள்ளது.குழு அனுமதிஇந்த தொகையிலிருந்து, 5,500 கோடி ரூபாய், சீன வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தொகை, சீன வங்கிகள் கொடுத்த அசலில், 55 சதவீதமாகும். இந்த திட்டத்தை, யு.வி., சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு கடன் வழங்கியோர் குழு அனுமதி வழங்கி உள்ளது.ஆர்காம் நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ‘ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ப்ராடெல்’ ஆகிய நிறுவனங்களின் கடன்களை அடைப்பதற்கான திட்டத்துக்கும், கடன் வழங்கியோர் குழு அனுமதி வழங்கியுள்ளது.


பாதுகாப்பான கடன்


ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் மொபைல் போன் கோபுரங்கள் மற்றும் பைபர் ஆகியவற்றை, ரிலையன்ஸ் ஜியோ, 4,700 கோடி ரூபாய்க்கு பெற்றுக் கொள்கிறது.யு.வி., நிறுவனம், ஆர்காம் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் சொத்துக்களை, 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறது.ஆர்காம் நிறுவனத்திற்கு மொத்தம், 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதில், 33 ஆயிரம் கோடி ரூபாய், பாதுகாப்பான கடன்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)