பதிவு செய்த நாள்
09 மார்2020
00:02
யெஸ் பேங்க் நெருக்கடியால், சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் வகையில், மியூச்சுவல் பண்டு முதலீடுகளை வேறு வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மோசமான வாராக்கடன் பிரச்னையால், யெஸ் பேங்க் நெருக்கடிக்கு உள்ளாகி, ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் வந்துள்ளது. யெஸ் பேங்கில் இருந்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மியூச்சுவல் பண்டு முதலீடு கொண்டுள்ள யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள்,தங்கள் முதலீட்டை திரும்ப பெறும் நிலையில் இருந்தால், வேறு வங்கி கணக்கு மூலம் அதை செய்து கொள்ளலாம் என, ஒரு சில மியூச்சுவல் பண்டுநிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வாடிக்கையாளர் நலன் கருதி, மார்ச், 6ம் தேதி திரும்ப செலுத்த வேண்டிய பணத்தை, ஒரு சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிறுத்தியும் வைத்துள்ளன. வேறு வங்கி கணக்கை சமர்ப்பித்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.மேலும், ‘டிவிடெண்ட்’ தொகையை பெறுவதற்கான வங்கி கணக்கையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளித்துள்ளன.
புதிய முதலீடு மற்றும் பணம் செலுத்துவதற்கான யெஸ் பேங்க் காசோலைகளை ஏற்க வேண்டாம் என்றும் விநியோக நிறுவனங்களை, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|