பதிவு செய்த நாள்
09 மார்2020
00:15
பங்குச்சந்தையின்
ஏற்ற, இறக்கமான போக்கு, புதிய கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் பற்றி ஒரு
அலசல்:
வரிச்சலுகைக்கான முதலீடுகளில், பங்குச்சந்தையின்
பலன் அளிக்கும் முதலீடுகளில் ஒன்றாக, ‘இ.எல்.எஸ்.எஸ்.,’ எனப்படும்,
‘ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்’ அமைகிறது. வரி சேமிப்பு,
குறைந்தபட்ச லாக்-இன் காலம் ஆகிய அம்சங்களுடன், நீண்ட கால நோக்கில்
பலன் அளிக்க கூடிய சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
வரி சேமிப்பை மட்டும் பார்க்காமல், பலனையும் முக்கியமாக கருதுபவர்களுக்கு இந்த
முதலீடு ஏற்றதாக அமைகிறது. எனினும்,
பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கமான சூழலில், இ.எல்.எஸ்.எஸ்.,
முதலீடு பொருத்தமாக இருக்கும் எனும் கேள்வி பல முதலீட்டாளர்கள்
மனதில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், புதிய வருமான வரி விகித வாய்ப்பு
உத்தேசிக்கப்பட்டுள்ளதால், புதிய முறையின் கீழ், இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு பொருத்தமாக இருக்கும் எனும் கேள்வி ஏற்கனவே எழுந்துள்ளது.
வரி சேமிப்பு முதலீடு
புதிய முறையில் பல்வேறு வழக்கமான வரிச்சலுகைகள் பெற முடியாது என்பதால், இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு பலனுள்ளதாக இருக்கும் எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கேள்வியை பொறுத்தவரை, பழைய வரி விகிதம் அல்லது புதிய வரி விகிதம் ஆகியவற்றில் எது ஏற்றதாக இருக்கும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன்பின் வரி சேமிப்பு முதலீடு குறித்து இறுதி செய்ய வேண்டும்.
நிதி இலக்கு முக்கியம்
எனினும், வரி சேமிப்பை மட்டும் மனதில் கொண்டு முதலீட்டை தேர்வு செய்யக்கூடாது என்று வல்லுனர்கள்
கூறுகின்றனர். இ.எல்.எஸ்.எஸ்., நீண்ட கால நோக்கில் பலன் அளிக்க நாடும்
முதலீடாக இருப்பதால், ஒருவர் தன் நிதி திட்டமிடலில், இதன் இடத்தை
மனதில் கொண்டு பார்க்க வேண்டும்.
உயர்கல்வி, ஓய்வு கால திட்டமிடல் ஆகிய நிதி இலக்குகளின் ஒரு அங்கமாக
ருதியிருந்தால், இதை தொடர்வதே ஏற்றதாகஇருக்கும். இதனிடையே பங்குச்
சந்தையின் ஏற்ற, இறக்கமான போக்கும், முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை கடந்த வாரமும், அதற்கு முந்தைய வாரமும் பெரும் சரிவுக்கு உள்ளானது.
பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கம் தொடரலாம் என, எதிர்பார்க்கப்படுவதால்,
முதலீட்டாளர்கள் பலர், இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டை நிறுத்திவிடுவது ஏற்றதாக இருக்குமா என, ஆலோசகர்களை கேட்க துவங்கியுள்ளனர். ஒரு சில முதலீட்டாளர்கள்
முதலீட்டை தள்ளிப்போடுவது சரியாக இருக்குமா என்றும் கேட்கும் நிலை உள்ளது.
நீண்ட கால பலன்
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை மீறி நீண்ட கால நோக்கில் பலன் அளிப்பதே, பங்கு
முதலீடு மற்றும் மியூச்சுவல் பண்டு முதலீட்டின் அடிப்படை அம்சம் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என, வல்லுனர்கள் இந்தகேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.
கடந்த,
10 ஆண்டு காலத்தில் வரி சேமிப்பு நிதிகள் உள்ளிட்ட சமபங்கு நிதிகள்
சராசரியாக, 11 சதவீத பலன் அளித்து வந்துள்ளன. எனவே நீண்ட கால
நோக்கில் இந்த முதலீட்டை
தொடர்வதே ஏற்றது என்கின்றனர்.சந்தையின் ஏற்ற, இறக்கமான போக்கால், முதலீட்டை பாதியில்கைவிட வேண்டாம் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீண்ட கால நிதி இலக்கிற்கு ஏற்ப முதலீட்டை தொடர்வதோடு, அடுத்த ஆண்டு முன்கூட்டியேதிட்டமிட்டு, எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீடு வாய்ப்பு மூலம்முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|