ஒரு முதலீட்டுப் பாடம் ஒரு முதலீட்டுப் பாடம் ...  ஜி.எஸ்.டி., தாக்கல் பிரச்னை ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு கெடு ஜி.எஸ்.டி., தாக்கல் பிரச்னை ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு கெடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கொரோனா பார்வை : பங்குச்சந்தைகளில் ரூ.5 லட்சம் கோடி அவுட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
12:38

மும்பை : கொரோனா வைரஸால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டதால் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பங்குச்சந்தைகள் உலகளவில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்தியாவிலும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1515.01 புள்ளிகள் சரிந்து 36,061.61ஆகவம், நிப்டி 417.05 புள்ளிகள் சரிந்து 10,572.40ஆகவும் வர்த்தகமாகின.

மதியம் 1 மணியளவில் சென்செக்ஸ் 2200 புள்ளிகளும், நிப்டி 620 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.

கொரோனா வைரஸ் பாதிப்பாலும், கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி கண்டதாலும், யெஸ் வங்கி சந்தித்துள்ள கடும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சம் கோடி இழப்பு
இன்றைய வர்த்தகம் காலையில் சந்தித்த சரிவு காரணமாக மும்பை பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்று 1,44,31,224.41 கோடியாக இருந்த மும்பை பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு திங்களான இன்று(மார்ச் 9) 1,39,39,640.96 கோடியாக குறைந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)