பதிவு செய்த நாள்
10 மார்2020
01:23
புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரிகளை செலுத்துவதற்கு உதவும், ‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள பிரச்னைகள், இரு ஆண்டுகளாக நீடித்து வருகின்றன.
இதையடுத்து, இக்குறைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை, 15 நாட்களில் தெரிவிக்கும்படி, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தை, மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.நாட்டில், ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இணைய தொடர்பு மூலம் வரியை செலுத்துவது உள்ளிட்டவற்றுக்காக, ஜி.எஸ்.டி.என்., நிறுவனம் துவக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்துக்கு தேவையான மென்பொருளை, இன்போசிஸ் உருவாக்கி வழங்கி உள்ளது.இருப்பினும், வரி தாக்கல் செய்வோர் பல்வேறு இன்னல்களை, கடந்த, 30 மாதங்களாக சந்தித்து வருகின்றனர். 2018ம் ஆண்டில் எழுந்த பிரச்னைகள்கூட இன்னும் களையப்படாமல் உள்ளன.
இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம், இன்போசிஸ் நிறுவனத்திடம், ‘பிரச்னைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை இன்னும், 15 நாட்களில் வழங்க வேண்டும்’ என, கறாராக தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை அன்று, வருவாய் துறை செயலர், இன்போசிஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகளை அழைத்து பேசியுள்ளார். அதில் ஜி.எஸ்.டி., நெட் வொர்க்கில் தொடர்ந்து நீடித்து வரும் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் முடிவில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனியை, பிரச்னைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை முன்வைக்குமாறு கேட்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|