ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு!ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு! ...  கச்சா எண்ணெய்: உறுப்புநாடுகள் அலறல் கச்சா எண்ணெய்: உறுப்புநாடுகள் அலறல் ...
ஆறு மனமே ஆறுஆடிட்டர் கட்டளை ஆறு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
11:24

மார்ச் 31க்குள், நிறு­வ­னங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டிய ஆறு அம்­சங்­கள்!
நாம பாஸ் ஆயிட்­டோமா? பர்ஸ்ட் கிளாஸா? எந்த பாடத்­தில் எத்­தனை மார்க்? – இப்­படி ஒரு மாண­வன், ஆண்டு தேர்­வுக்­குப்­பின் தனது பிரா­க­ரஸ் ரிப்­போர்ட் பார்க்­கும் பர­ப­ரப்பு மன நிலை­தான் ஒரு தொழி­ல­தி­பர்/ வணி­கர்­க­ளுக்­கும்!நிதி­யாண்­டின் இறு­தி­யில் தயா­ரிக்­கப்­படும், தங்­கள் நிறு­வ­னத்­தின் லாப – நஷ்ட கணக்கு விவ­ரங்­களை கையில் வாங்கி பார்க்­கும்­போது, தொழி­ல­தி­பர் / வணி­கர்­க­ளுக்­கும் ரிசல்ட் பார்க்­கும் ஒரு மாண­வ­ரின் மன­நி­லை­தான் இருக்­கும்.

ஒரு மனி­தன் அமை­தி­யாக, நிம்­ம­தி­யாக, சந்­தோ­ஷ­மாக வாழ, ‘ஆறு மனமே ஆறு; ஆண்­ட­வன் கட்­டளை ஆறு...’ என்று சொல்­வார் கவி­ஞர் கண்­ண­தா­சன். அது­போல, தொழி­ல­தி­பர் / வணி­கர்­கள் நிம்­ம­தி­யாக தொழில் நடத்த ஆடிட்­டர் தரும் ஆறு கட்­ட­ளை­கள் இது.வரு­டம்­தோ­றும், ஏப்.,1 முதல் மார்ச், 31 வரை உள்ள நாட்­கள்­தான் ஒரு நிதி­யாண்டு. இது தொழில் / வணி­கம் செய்­யும் அனைத்து தொழி­ல­தி­பர்­கள் / வணி­கர்­க­ளுக்­கும் முக்­கி­ய­மான தினங்­கள். ஒரு மாண­வர் பரிட்­சைக்கு தயா­ரா­வ­து­போல, ஒவ்­வொரு தொழி­ல­தி­ப­ரும் வரு­டத்­தின் நிதி­யாண்டு இறுதி நாளான மார்ச் 31 ஆம் தேதிக்கு பர­ப­ரப்­பாக தயா­ரா­வார்­கள்.ஏனென்­றால், வரித்­தாக்­கல் / இந்த நிதி­யாண்­டுக்­கான வரவு – செலவு – சேமிப்பு – முத­லீடு – இன்­சூ­ரன்ஸ் போன்­ற­வற்­றில் கவ­னம் செலுத்­து­வ­தற்கு, மார்ச், 31 இறுதி நாள். அத­னால், ஒரு தொழி­ல­தி­பர் / வணி­கர் இந்த நிதி­யாண்­டின் இறு­திக்­குள் செய்ய வேண்­டிய முக்­கி­ய­மான / முதன்­மை­யான ஆறு கட்­ட­ளை­கள் பார்ப்­போம்.

கட்டளை ஒன்றுவங்­கி­கள் நிறு­வ­னங்­க­ளுக்கு தரும் நடை­முறை மூல­தன கடனே, ஒரு நிறு­வ­னம் தடை­யற இயங்­கு­வ­தற்கு மிக அவ­சி­யம். அந்த மூல­தன கடன் தடை­யின்றி கிடைக்க நாம் வங்­கி­க­ளுக்கு தரும் தக­வல்­க­ளில் ­தான் இருக்­கிறது.வங்­கி­க­ளுக்கு, ஒரு நிறு­வ­னம் அளிக்­கும் ஸ்டாக் ஸ்டேட்­மென்ட் விவ­ர­மும், நிதி நிலை அறிக்­கை­யில் காண்­பிக்­கப்­படும் ஸ்டாக் விவ­ரங்­களும் ஒன்­றாக இருப்­பது மிக மிக அவ­சி­யம். ஒரு நிறு­வ­னம் அளிக்­கும் ஸ்டாக் ஸ்டேட்­மென்ட் அடிப்­ப­டை­யில்­தான், வங்­கி­கள் நடை­முறை மூல­த­னக் கடனை, அதா­வது, ‘ஓபன் கேஷ் கிர­டிட் (ஓசிசி)’ ஒரு நிறு­வ­னத்­துக்கு வழங்­கு­கிறது. சில நிறு­வ­னங்­கள், மார்ச் இறு­தி­யில், வங்­கி­க­ளுக்கு அளிக்­கும் ஸ்டாக் ஸ்டேட்­மென்ட்­டும், நிதி நிலை அறிக்­கை­யில் தரும் ஸ்டாக்­கும் வேறு­பாடு உள்­ளது. இது­போன்ற வேறு­பா­டு­களை இப்­போது வங்­கி­கள் அனு­ம­திப்­ப­தில்லை. இப்­படி வேறு­பாடு இருக்­கும் பட்­சத்­தில், நிறு­வ­னங்­க­ளுக்கு நடை­முறை மூல­தன கட­னில் சிக்­கல் வர­லாம்.

கட்டளை இரண்டுஒரு நிறு­வ­னம், ஒவ்­வொரு நிதி­யாண்­டி­லும் சட்­டப்­படி செலுத்த வேண்­டிய நிலுவை தொகை­களில் கவ­னம் செலுத்த வேண்­டும். நிதி­யாண்டு இறு­திக்­குள் அவற்றை உரிய ஊழி­யர்­கள் கட்டி முடித்­தி­ருக்­கி­றார்­களா என்­பதை தொழி­ல­தி­பர்­கள் சரி பார்க்க வேண்­டும். அதன்­படி, ஒரு நிறு­வ­னம் அந்த நிதி­யாண்­டுக்­குள் செலுத்த வேண்­டிய இ.எஸ்.ஐ. (எம்ப்­ளா­யீஸ் ஸ்டேட் இன்­சூ­ரன்ஸ்), பி.எப். (பிரா­வி­டன்ட் பண்ட்), ஜி.எஸ்.டி. (குட்ஸ் அன் சர்­வீஸ் டாக்ஸ்), டி.டி.எஸ். (டாக்ஸ் டிடக்­டட் அட் சோர்ஸ்), புர­ப­ஷ­னல் டாக்ஸ் போன்­ற­வற்றை உரிய தேதிக்­குள் செலுத்தி இருந்­தால் மட்­டுமே, அது அந்த நிதி­யாண்­டில், நிறு­வ­னத்­தின் அனு­ம­திக்­கப்­பட்ட செல­வாக வரு­மான வரித்­துறை அனு­ம­திக்­கும். எனவே, நிதி­யாண்டு இறு­திக்­குள் மேற்­கண்­டவை உரிய முறை­யில் செலுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்ய வேண்­டும்.

கட்டளை மூன்று‘ரேஸியோ அன­ல­சிஸ்’ (விகித பகுப்­பாய்வு) என்­பது ஒரு நிறு­வ­னத்­தின் பணப்­பு­ழக்­கம், செயல்­பாட்டு திறன், லாபத்­தன்மை,கடனை திருப்பி தரும் திறன் போன்ற நுணுக்­கங்­களை பெறு­வ­தற்­கான, ஒரு அளவு முறை­யா­கும். இந்த ரேஸியோ அன­ல­சிஸ்­தான், ஒரு நிறு­வ­னம், வங்­கி­களில் கடன் பெறு­வ­தற்கு முக்­கி­ய­மான கார­ணி­யாக அமை­கிறது. இவற்றை ஆண்டு இறு­திக்­குள் கணக்­கிட்டு அனு­கூ­ல­மாக மாற்­றும் பட்­சத்­தில் உங்­க­ளு­டைய கடன் மற்­றும் நிதி வாய்ப்­பு­களை அதி­க­ரித்­துக் கொள்ள முடி­யும்

கட்டளை நான்குபொது­வாக, தொழில் நிறு­வ­னங்­க­ளின் டாக்­டர் போலத் தான் ஆடிட்­டர் என்­ப­வ­ரும். ஒரு நோயா­ளியை புரிந்து கொண்டு டாக்­டர் மருந்து அளிப்­ப­து­போல, ஒரு ஆடிட்­டர், தான் சேவை புரி­யும் தொழில் நிறு­வ­னத்தை புரிந்து கொண்டு அவ்­வப்­போது அறி­வு­ரை­கள் வழங்­கு­வார்.அவர் சேவை தரும் நிறு­வ­னத்­தின், தொழில் நிறு­வ­னங்­க­ளின் பல­த­ரப்­பட்ட வரி நில­வ­ரங்­கள், நிதி நிலைமை, லாபம் ஈட்­டும் தன்மை போன்ற நுணுக்­கங்­களை அதன் ஆடிட்­டர் மட்­டுமே நன்கு அறி­வார்... இத­னால், உங்­க­ளுக்கே தெரி­யாத / அறி­யாத சட்ட மீறல்­களை முன்­கூட்­டியே தடுக்க முடி­யும். அத­னால் ஏற்­பட இருக்­கும் அப­ரா­தத்­தில் இருந்­தும் தப்­பிக்க முடி­யும். எனவே உங்­கள் ஆடிட்­டரை அணுகி ஆண்டு இறு­திக்­கான ஆலோ­ச­னையை பெற்று கவ­ன­மாக பின்­பற்ற வேண்­டும் என்­பதே நான்­கா­வது கட்­டளை.


கட்டளை ஐந்துஒரு நிறு­வ­னத்­திற்கு வர­வேண்­டிய கடன் தொகை­கள், வராக் கடன்­கள், அட்­வான்ஸ் ஆகி­ய­வற்றை ஆண்டு இறு­திக்­குள் வசூல் செய்ய சிறப்பு முயற்­சி­கள் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். உதா­ர­ண­மாக, நிறு­வ­னம் தனது ஊழி­யர்­களில் பல­ருக்கு, பல வகை­களில் நிதி­யாண்டு முழு­வ­தும் பல சந்­தர்ப்­பங்­களில் அட்­வான்ஸ் தொகை வழங்கி இருக்­கும். பயண முன்­ப­ணம் (டிரா­வ­லிங் அட்­வான்ஸ்) கூட வழங்­கப்­பட்­டி­ருக்­கும். அட்­வான்ஸ் வழங்­கப்­பட்ட தொகைக்­கான கணக்கு விவ­ரங்­களை உரிய காலத்­தில் அல்­லது நிதி­யாண்­டின் இறுதி நாளான மார்ச் 31 ஆம் தேதிக்­குள், நிறு­வ­னத்­தின் உரிய கணக்­கா­ளர்­கள் கேட்­டுப்­பெற வேண்­டும்.

கட்டளை ஆறுதற்­போ­தைய முறை­யில் குறிப்­பிட்ட வரம்­புக்கு மேல் கடன் பெறும் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது நிறு­வ­னங்­கள் குறித்த கிரெ­டிட் ரேட்­டிங் பெறு­தல் அவ­சி­ய­மா­கிறது. கிரெ­டிட் ரேட்­டிங் பொறுத்­து­தான் கட­னுக்­கான வட்டி விகி­தம் வங்­கி­களில் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது. ஆகவே கிரெ­டிட் ரேட்­டிங் சாத­க­மாக இருக்­கும் வகை­யில் வைத்­துக் கொள்­ளல் அவ­சி­யம். உதா­ர­ண­மாக வங்­கி­யில் உங்­கள் நிறு­வ­னத்­துக்கு நடை­முறை மூல­தன கடன் 3 கோடி அனு­ம­திக்­கப்­பட்டு இருக்­கிறது என்று வைத்­துக்­கொள்­வோம்.அதில் 2.5 கோடி­யைத்­தான் பயன்­ப­டுத்தி இருக்­கி­றீர்­கள். மீத­முள்ள ரூ. 50 லட்­சத்தை எடுத்து, சில நாட்­க­ளுக்கு உங்­கள் கரண்ட் அக்­க­வுண்­டில் வைத்­துக்­கொள்­ளுங்­கள் என்று நிதி­யாண்டு இறு­தி­யில் சில வங்கி மேலா­ளர்­கள் கூறு­வார்­கள். கார­ணம், அது அவர்­க­ளின் அந்த நிதி­யாண்­டுக்­கான டார்க்­கெட் ஆக இருக்­க­லாம். அவர் அறி­வுரை கேட்டு நீங்­கள் அந்த பணத்தை, கரண்ட் அக்­க­வுண்­டுக்கு மாற்­றி­னால், கிர­டிட் ரேட்­டிங்­கில், உங்­கள் நிறு­வன டிரா­யிங் பவர் பாதிக்­கப்­ப­ட­லாம். இது­போல், மற்­ற­வர்­க­ளுக்­காக செய்­யப்­படும் விண்டோ டிர­சங்­கி­னால், உங்­கள் நிறு­வ­னம் பாதிக்­கப்­ப­டா­மல் பார்த்து கொள்­வது அவ­சி­யம்.

நிதி­யாண்­டின் இறு­திக்­குள், இது­போன்று ஆறு கட்­ட­ளை­கள் உட்­பட பல்­வேறு முக்­கிய அம்­சங்­களை நிறு­வ­னங்­கள் பின்­பற்­றி­னால், நிதி நிலை அறிக்கை மேம்­படும் . திரு­ம­ணத்­துக்கு ஒரு மணப்­பெண் அலங்­க­ரிக்­கப் படு­வது போல, சட்­டத்­துக்கு உட்­பட்டு, நிறு­வ­னத்­தின் நிதி நிலை அறிக்­கையை இது­போல் முக்­கிய அம்­சங்­களில் கவ­னம் செலுத்தி அலங்­க­ரித்­துக் கொண்­டால் அது கவர்ச்­சி­க­ர­மாக இருக்­கும்.கவர்ச்­சி­யான, கவ­னிக்­கத்­தக்க ‘பேலன்ஸ் ஷீட்’தான், நிறு­வ­னத்­துக்கு நிதி வழங்­கும், முத­லீட்­டா­ளர்­க­ளை­யும், வங்­கி­க­ளை­யும் ஈர்க்க வல்­லமை கொண்­டது. எனவே நிறு­வ­னங்­கள் இந்த நிதி­யாண்­டின் இறுதி நாட்­களில் மிக கவ­ன­மாக இருங்­கள். குறிப்­பாக, சிறு தொழில் அமைப்­பு­கள் இது­போன்ற அம்­சங்­களை கவ­னிக்­கா­மல் விட்டு விடு­கின்­றன. அவை­யும் இவற்­றில் கவ­னம் செலுத்­தி­னால், வங்­கி­கள் உங்­கள் வளர்ச்­சி­யில் கைகோர்த்­துக்­கொள்­ளும் என்­பது நிச்­ச­யம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)