பதிவு செய்த நாள்
11 மார்2020
00:04
லண்டன்:‘ஒபெக்’ எனும், பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், தினசரி, 3,700 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்த ஆண்டு முடியும் வரை, உற்பத்தி குறைப்பை தொடர வேண்டும் என்றும், தற்போது இருக்கும் நிலையிலிருந்து கூடுதலாக, தினசரி, 15 லட்சம் பேரலைக் குறைக்க வேண்டும் என்றும், ஒபெக், அதன் கூட்டணி நாடுகளிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், ரஷ்யா இந்த உற்பத்தி குறைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து, கூட்டணி குலைந்தது. இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியா விலை குறைப்பையும், உற்பத்தி அதிகரிப்பையும் அறிவித்தது.இதனால் எண்ணெய் விலை சரிவைக் கண்டது. இதன் காரணமாக, உறுப்பு நாடுகள் வர்த்தகத்தில் தினசரி, 3,700 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கின்றன.
இதற்கிடையே, சவுதி அரேபியா தினசரி உற்பத்தியை, 1.23 கோடி பேரலாக, ஏப்ரல் முதல் அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் வகையில், ஒபெக் அமைப்புடன் ஒத்துழைப்பதற்கான கதவுகள் திறந்தே இருப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|