கச்சா எண்ணெய்: உறுப்புநாடுகள் அலறல் கச்சா எண்ணெய்: உறுப்புநாடுகள் அலறல் ...  சில்லரை விலை பணவீக்கம் பிப்ரவரியில் குறைவாக இருக்கும் சில்லரை விலை பணவீக்கம் பிப்ரவரியில் குறைவாக இருக்கும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் பங்குகள் 16ம் தேதி பட்டியலிடப்படலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2020
00:06

புதுடில்லி:எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் இறுதி வெளியீட்டு விலை, 755 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்நிறுவன பங்குகள் வரும், 16ம் தேதியன்று, சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளதாக தெரிகிறது.எஸ்.பி.ஐ., நிறுவனத்தின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில், அண்மையில் களம் இறங்கியது. கடந்த, 2ம் தேதி துவங்கி, 5ம் தேதி நிறைவு பெற்ற இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் போது, ஒரு பங்கின் விலை, 750 – 755 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.


பங்கு வெளியீட்டின்போது, 500கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், நிறுவனத்தின் பங்குதாரர்களான, எஸ்.பி.ஐ., நிறுவனத்தின், 3.73 கோடி பங்குகளும், கார்லைல் நிறுவனத்தின், 9.32 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட்டன.‘கொரோனா’ பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சந்தை சரிவிலிருந்த போதும், இந்நிறுவன பங்கு வெளியீடு வெற்றி பெற்றது. வெளியீட்டு அளவைவிட, 22 மடங்கு அதிக பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் குவிந்தன.


இந்நிலையில், நிறுவன பங்கின் இறுதி விலை, 755 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், இந்நிறுவனம் புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம், 10 ஆயிரத்து, 340 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது.இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள், 16ம் தேதியன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என தெரிகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)