பதிவு செய்த நாள்
11 மார்2020
00:09
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில், அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கும் என, கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, ராய்ட்டர்ஸ் நிறுவனம், கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டு, முடிவுகளை அறிவித்துள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:முக்கியமான 40 பொருளாதார அறிஞர்களிடம் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் குறித்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில், அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத வகையில் குறைந்து இருக்கும் என, அதில் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இலக்கை விட இது அதிகமாகவே இருக்கும்.உணவுப் பொருட்கள் விலை ஓரளவு குறைந்து இருப்பதன் காரணமாக, பணவீக்கம் குறைந்திருக்கும். இதன்படி, பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம், 6.80 சதவீதமாக இருக்கும். இதுவே, கடந்த ஜனவரி மாதத்தில் மிக அதிகமாக, 7.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்பின் போது, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான நிலையான, 2 சதவீதம் முதல், 6 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் இருக்கும் என, யாரும் தெரிவிக்கவில்லை.இந்த கருத்துக்கணிப்பின் போது, கொரோனா வைரஸின் தாக்கம் தொடரும் நிலையில், ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|