பதிவு செய்த நாள்
11 மார்2020
00:15
புதுடில்லி:ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி விட்டார்.
கடந்த திங்களன்று, பங்குச் சந்தைகள் கடுமையான சரிவைக் கண்டதை அடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில், 43 ஆயிரம் கோடி ரூபாய் காணாமல் போனது.இவ்வளவு பெரிய இழப்பினை அடுத்து, முகேஷ் அம்பானி, ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துவிட்டார். இவரது இடத்தை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர், ஜாக் மா தற்போது பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
புளூம்பெர்க் நிறுவனம் வழங்கியுள்ள தகவலின்படி, ஜாக் மாவின் சொத்து மதிப்பு, முகேஷ் அம்பானியை விட, 19 ஆயிரத்து, 250 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு, 3.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, ஜாக் மா, ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர் பட்டியலில், மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அலிபாபா நிறுவனத்தின் சில வணிகங்களை, கொரோனா வைரஸ் தாக்கியிருந்தாலும், கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள், மொபைல் பயன்பாடுகளுக்கான தேவைகள் ஆகியவை அதிகரித்த காரணத்தினால், பாதிப்புகள் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|