பதிவு செய்த நாள்
13 மார்2020
00:16
மும்பை:நிதிச் சிக்கலில் மாட்டியிருக்கும், யெஸ் பேங்கின் பங்குகளை, 7,250 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான அனுமதியை, எஸ்.பி.ஐ., வங்கி, அதன் நிர்வாகக் குழுவிடமிருந்து பெற்றுள்ளது.
யெஸ் பேங்கின், 725 கோடி பங்குகளை, பங்கு ஒன்றின் விலை, 10 ரூபாய் என, 7,250 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான அனுமதியை, எஸ்.பி.ஐ., வங்கியின் நிர்வாகக் குழு வழங்கி இருக்கிறது.இருப்பினும், யெஸ் பேங்கில், எஸ்.பி.ஐ., வங்கியின் பங்கு, 49 சதவீதத்துக்குள் இருக்கும்.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி, யெஸ் பேங்க் மீட்பு குறித்து ஒரு திட்டத்தை தெரிவித்திருந்தது. அதன்படி, யெஸ் பேங்கின், 49 சதவீத பங்குகளை, மீட்பு நிறுவனங்கள் வாங்கிக் கொள்வது என்றும், மூன்று ஆண்டுகளுக்கு, அவை, பங்கின் அளவை, 26 சதவீதத்துக்கு கீழாக குறைக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது, 7,250 கோடி ரூபாயை முதலீடு செய்ய, எஸ்.பி.ஐ., அனுமதி பெற்றுள்ளது.
இதற்கிடையே, யெஸ் பேங்கின் பங்குகளை வாங்குவதற்காக, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையிலான கூட்டமைப்பில், ‘எச்.டி.எப்.சி., கோட்டக் மகிந்திரா பிரைம்’ ஆகிய நிறுவனங்களும் சேரக்கூடும் என தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|