பதிவு செய்த நாள்
13 மார்2020
23:48
புதுடில்லி:யெஸ் பேங்க் விவகாரத்தை அடுத்து, நாடு முழுக்க உள்ள பல தனியார் வங்கிகள் குறித்து, சமூக ஊடகங்களிலும், பிறவற்றிலும், பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பல தனியார் துறை வங்கிகள், தங்கள் நிதிநிலை நன்றாக இருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.சமீபத்தில், கரூர் வைஸ்யா வங்கி மற்றும் ஆர்.பி.எல்., வங்கி ஆகியவை, தங்கள் நிதி நிலையை தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வரிசையில், பெடரல் வங்கியும், லட்சுமி விலாஸ் வங்கியும், இதே போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.பெடரல் வங்கி, தன் சொத்து மதிப்பு நன்றாக இருப்பதாகவும், போதுமான மூலதனம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வாராக் கடன் அளவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஒரு கோடி வாடிக்கையாளர்களுடன், 90 ஆண்டுகள் நெருக்கத்தில், வங்கி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.லட்சுமி விலாஸ் வங்கி, ஒழுங்குமுறை அமைப்பு பரிந்துரைத்த, ‘லிக்விடிட்டி கவரேஜ்’ விகிதம், ஒப்பீடளவில் அதிகம் இருப்பதாகவும், வாராக் கடன் அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|