பதிவு செய்த நாள்
14 மார்2020
23:58
சென்னை:சென்னை – அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இடையில், செயற்கைக்கோள் வாயிலாக பயன்படுத்தப்படும், ‘இன்டர்நெட்’ வசதி மட்டுமே கிடைக்கிறது. இதனால், சென்னை – அந்தமான் இடையே, கடலுக்கு அடியில் ‘ஆப்டிகல் பைபர்’ கேபிளை பதிக்கும் திட்டம் ஜனவரியில் துவங்கப்பட்டது.
இதற்கான பணியை, பி.எஸ்.என்.எல்., மேற்கொண்டது. இந்தத் திட்டம் தற்போது முடிந்து, சோதனை நடந்து வருகிறது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: சென்னை -– அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இடையில், 1,000 அடி ஆழத்தில், சுறா மீன்களால் கூட சேதப்படுத்த முடியாத வகையில், 1,224 கோடி ரூபாய் செலவில்,ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது.
இந்தப் பணி முழுமையாக முடிக்கப்பட்டு, இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது. அதன் பின், அந்தமான் தீவுகளில் தற்போது கிடைக்கும் இன்டர்நெட் வேகத்தை விட, 100 மடங்கு அதிகமான வேகத்தில், இன்டர்நெட் சேவை கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|