பதிவு செய்த நாள்
15 மார்2020
00:00
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, உலக பொருளாதார நிலைமைகளை மீறி, தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டு வருகிறது.
மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய சாதனை உயரத்தை தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 36.06 லட்சம் கோடி ரூபாய். சமீப காலமாகவே தொடர்ந்து அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வரிசையில், கடந்த, 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 569 கோடி டாலர் அதிகரித்து, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, ஒரு புதிய சாதனை அளவாகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 542 கோடி டாலர் அதிகரித்து, 48ஆயிரத்து, 154 கோடி டாலராக உயர்ந்திருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 531 கோடி டாலர் அதிகரித்து, 45 ஆயிரத்து, 114 கோடி டாலராக உள்ளது. மேலும் மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 32 கோடி டாலர் அதிகரித்து, 3,100 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.29 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|