பதிவு செய்த நாள்
15 மார்2020
23:56
முதலில்,
பி.எம்.சி., கூட்டுறவு வங்கி பிரச்னை. இப்போது தனியார் வங்கியான
யெஸ் பேங்க் எதிர்கொள்ளும் நெருக்கடி. இப்படி அடுத்தடுத்து இரண்டு
வங்கிகள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது, சாமானிய மக்கள்
மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நெருக்கடிகள் எதிர்பாராதவை என்றாலும், இது போன்ற இடர்களில் இருந்து, சேமிப்பு கணக்கு பணத்தை பாதுகாப்பதற்கு தேவையான அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
வங்கி
கணக்கு: வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்படும் நிலை
ஏற்படுவதை தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கு
வைத்திருப்பது நல்லது. ஒரு வங்கி கணக்கு முடங்கினால் கூட, இன்னொரு
வங்கி கணக்கை இயக்கி கொள்ளலாம். பணத்தை பிரித்து போடும் போது, டிபாசிட் காப்பீடு பாதுகாப்பும் கூடுதலாக கிடைக்கும்.
தனித்தனி
கணக்கு: ஒரே வங்கியில் பணத்தை போடுவதை விட, பிரித்து போடுவது நல்லது
என்றாலும், எத்தனை வங்கி கணக்கு வைத்திருப்பது என்பது முக்கியம்.
பரவலாக்கம் பலன் தரும் என்றாலும், அதிக சேமிப்பு கணக்குகள் வைத்திருந்தால், அவற்றை நிர்வகிப்பது சிக்கலாகும். மேலும், கட்டணங்கள் மூலம்பராமரிப்பு செலவும் அதிகரிக்கலாம்.
இரண்டு கணக்குகள்: பொதுவாக, இரண்டு சேமிப்புகணக்குகளை வைத்திருப்பது ஏற்றது என கருதப்படுகிறது.ஒரு கணக்கை சம்பள கணக்காக வைத்திருக்கலாம்.இதிலிருந்து மாதத்தவணை போன்றவற்றை செலுத்தலாம்.இன்னொரு கணக்கை முதலீடு போன்றவற்றை
மேற்கொள்ளலாம்.
மூன்று
கணக்குகள்: தேவையின் அடிப்படையிலேயே சேமிப்பு கணக்கை நாட
வேண்டும். அந்த வகையில் அதிக பட்சம் மூன்று கணக்குகளுக்கு மேல்
வைத்திருப்பது ஏற்றது. ஒரு கணக்கு சம்பள கணக்காகவும், மற்றொரு கணக்கை இணை கணக்காகவும் வைத்துஇருக்கலாம். மூன்றாவது கணக்கைமுதலீடுகளுக்கான கணக்காக பரமாரிக்கலாம்.
இடர்
தன்மை: பரவலாக்கம் அவசியம் என்றாலும், அளவுக்கு அதிக கணக்குகளை
துவங்குவதோ, வங்கிகளையே சந்தேகிப்பதோ தேவையற்றது. சமூக ஊடக
வதந்திகளாலும் கவலை கொள்ள வேண்டாம். வசதியான சேவையை விட
பாதுகாப்பிற்கு முக்கியம் அளித்து, வங்கிகளை தேர்வு செய்ய வேண்டும்.
பலன் அதிகமாக இருந்தால், இடரும் அதிகம் என உணர வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|