ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’ ...  பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்­கள் சேமிப்பு கணக்கைபாது­காப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2020
23:56

முத­லில், பி.எம்.சி., கூட்­டு­றவு வங்கி பிரச்­னை. இப்­போது தனி­யார் வங்­கி­யான யெஸ் பேங்க் எதிர்­கொள்­ளும் நெருக்­கடி. இப்­படி அடுத்­த­டுத்து இரண்டு வங்­கி­கள் சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது, சாமா­னிய மக்­கள் மத்­தி­யில் கவ­லை­யை­யும் அச்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இத்­த­கைய நெருக்­க­டி­கள் எதிர்­பா­ரா­தவை என்­றா­லும், இது போன்ற இடர்­களில் இருந்து, சேமிப்பு கணக்கு பணத்தை பாது­காப்­ப­தற்கு தேவை­யான அம்­சங்­க­ளை­யும் அறிந்­தி­ருக்க வேண்­டும்.


வங்கி கணக்கு: வங்­கி­யில் போட்ட பணத்தை எடுக்க முடி­யா­மல் அவ­திப்­படும் நிலை
ஏற்­ப­டு­வதை தவிர்க்க, ஒன்­றுக்கு மேற்­பட்ட வங்கி கணக்கு வைத்­தி­ருப்­பது நல்­லது. ஒரு வங்கி கணக்கு முடங்­கி­னால் கூட, இன்­னொரு வங்கி கணக்கை இயக்கி கொள்­ள­லாம். பணத்தை பிரித்து போடும் போது, டிபா­சிட் காப்­பீடு பாது­காப்­பும் கூடு­த­லாக கிடைக்­கும்.
தனித்­தனி கணக்கு: ஒரே வங்­கி­யில் பணத்தை போடு­வதை விட, பிரித்து போடு­வது நல்­லது என்­றா­லும், எத்­தனை வங்கி கணக்கு வைத்­தி­ருப்­பது என்­பது முக்­கி­யம். பர­வ­லாக்­கம் பலன் தரும் என்­றா­லும், அதிக சேமிப்பு கணக்­கு­கள் வைத்­தி­ருந்­தால், அவற்றை நிர்­வ­கிப்­பது சிக்­க­லா­கும். மேலும், கட்­ட­ணங்­கள் மூலம்பரா­ம­ரிப்­பு செல­வும் அதி­க­ரிக்­க­லாம்.


இரண்டு கணக்­கு­கள்: பொது­வாக, இரண்டு சேமிப்புகணக்­கு­களை வைத்­தி­ருப்­பது ஏற்­றது என கரு­தப்­ப­டு­கிறது.ஒரு கணக்கை சம்­பள கணக்­காக வைத்­தி­ருக்­க­லாம்.இதி­லி­ருந்து மாதத்­த­வணை போன்­ற­வற்றை செலுத்­த­லாம்.இன்­னொரு கணக்கை முத­லீடு போன்­ற­வற்றை
மேற்­கொள்­ள­லாம்.

மூன்று கணக்­கு­கள்: தேவை­யின் அடிப்­ப­டை­யி­லேயே சேமிப்பு கணக்கை நாட வேண்­டும். அந்த வகை­யில் அதிக பட்­சம் மூன்று கணக்­கு­க­ளுக்கு மேல் வைத்­தி­ருப்­பது ஏற்­றது. ஒரு கணக்கு சம்­பள கணக்­கா­க­வும், மற்­றொரு கணக்கை இணை கணக்­கா­க­வும் வைத்­து­இருக்­க­லாம். மூன்­றா­வது கணக்கைமுத­லீ­டு­க­ளுக்­கான கணக்­காக பர­மா­ரிக்­க­லாம்.

இடர் தன்மை: பர­வ­லாக்­கம் அவ­சி­யம் என்­றா­லும், அள­வுக்கு அதிக கணக்­கு­களை துவங்­கு­வதோ, வங்­கி­க­ளையே சந்­தே­கிப்­பதோ தேவை­யற்­றது. சமூக ஊடக வதந்­தி­க­ளா­லும் கவலை கொள்ள வேண்­டாம். வச­தி­யான சேவையை விட பாது­காப்­பிற்கு முக்­கி­யம் அளித்து, வங்­கி­களை தேர்வு செய்ய வேண்­டும். பலன் அதி­க­மாக இருந்­தால், இட­ரும் அதி­கம் என உணர வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)