பதிவு செய்த நாள்
16 மார்2020
00:00
சந்தை
ஏற்ற இறக்கத்தால் பதற்றமடைந்து வெளியேறுவதை விட, முதலீட்டாளர்கள் தங்கள்
முதலீடுகளை ஆய்வு செய்து, பொருத்தமான உத்தியை வகுப்பது ஏற்றதாக இருக்கும்.
‘கொரோனா’
வைரஸ் அச்சம், பங்குச்சந்தைகளை பதம் பார்த்து வருகிறது. இந்திய
பங்குச்சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த வாரம், சந்தை வரலாறு
காணாத சரிவுக்கு உள்ளாகி, அதன் பின் மீண்டது. சந்தையில் ஏற்பட்ட
தொடர் சரிவு, பெரும்பாலான முதலீட்டாளர்
களை கலக்கத்தில் ஆழ்த்தியது.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக கணிக்க முடியாத நிலை, சந்தையின் போக்கு குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த
சூழலில், எதற்கு வம்பு என்று பங்குகளில் இருந்து வெளியேறி,
பாதுகாப்பான முதலீடுகளை நாடுவது இயல்பானது தான் என்றாலும், இந்த
பதற்றத்தையும், அவசரத்தையும் தவிர்க்க வேண்டும் என, வல்லுனர்கள்
வலியுறுத்துகின்றனர்.
சரிவில் வாய்ப்பு
பங்கு
முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல, மியூச்சுவல் பண்டு
முதலீட்டாளர்களும் கவலை அடைந்துள்ளனர். சந்தையின் சரிவு தவிர,
யெஸ் பேங்க் நெருக்கடி போன்ற காரணங்கள் மியூச்சுவல் பண்டு
முதலீடுகளின் செயல்பாட்டை பாதித்துள்ளன.
பாதுகாப்பானதாக
சொல்லப்படும், டெப்ட் பண்டு வகை நிதிகள் கூட பாதிப்பிற்கு இலக்காகி
உள்ளன. எனினும், சந்தையில் இருந்து வெளியேற நினைப்பதைவிட, இந்த சூழலை
சாதகமாக்கி கொண்டு முதலீட்டு தொகுப்பை பொருத்தமாக மாற்றி அமைக்க வேண்டும்
என்கின்றனர்.
தற்போதைய
சூழலில், பங்குகளை விட தங்கம் அல்லது பத்திரங்கள்
ஈர்ப்புடையதாக தோன்றினாலும், உள்ளூரில் தங்கத்தின் விலை
ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களில்,
19 சதவீதம் அதிகரித்திருப்பதை
மனதில் கொள்ள வேண்டும்.அரசு பத்திரங்கள் மீதான
பலனும்
குறைந்திருக்கிறது. மாறாக, சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கும்
நிலையில், குறைந்த விலையில் கிடைக்க கூடிய நீண்ட கால நோக்கிலானபங்குகளை தேர்வு செய்வதில்
கவனம் செலுத்தலாம் என, வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அதே நேரத்தில் பொருத்தமில்லாத பங்குகளையும் விலக்கலாம்.
மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களும், இதே போன்ற உத்தியை பின்பற்றலாம். கடந்த மூன்று ஆண்டுகளில், பல நிதிகள் மோசமான பலனை அளித்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து, பலன் தராத நிதிகளில் இருந்து வெளியேறி, அதே பிரிவில் நல்ல செயல்பாட்டை கொண்ட நிதிகளை நாடலாம். அதிலும்
குறிப்பாக, எஸ்.ஐ.பி., எனப்படும், சீரான முதலீடு வாய்ப்பை
நாடியவர்கள், சரிவால் முதலீட்டை நிறுத்திவிடாமல் இருக்க
வேண்டும்.
எஸ்.ஐ.பி., முதலீடு
எஸ்.ஐ.பி., முறை முதலீட்டில்,
சரியும் சந்தை ரூபாய் சராசரி விளைவு மூலம், குறைந்த விலையில் அதிக
யூனிட்களை வாங்க வழி செய்கிறது. எனவே, இந்த சூழலில் முதலீட்டை
தொடர்வதே சரியானது. ஏனெனில், எஸ்.ஐ.பி., முதலீடு நீண்ட கால நோக்கில்
பலன் அளிக்க வல்லது.
மியூச்சுவல் பண்டுகளில் நுழைய
காத்திருப்பவர்களுக்கும் இது சரியான தருணம்
என்கின்றனர்.
சந்தையில் சரிவு மூலம், ‘கரெக்ஷன்’ நிகழ்ந்திருப்பதால், இதை ஒரு
வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். இடர்
தன்மைக்கேற்ப மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் என்கின்றனர்.
சந்தையின்
போக்கு பதற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், முதலீடு ஒழுக்கத்தை
கடைப்பிடிப்பது அவசியமாகும். பங்குகள் செயல்பாட்டிற்கான
அடிப்படை அம்சங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். சந்தையின் போக்கை கணிப்பதைவிட, பொறுமை காப்பதும், முறையான ஆய்வு அடிப்படையில்முதலீட்டு உத்தியை வகுத்துக்கொள்வதன் மூலம், நீண்ட கால நோக்கில் செல்வ வளத்தைஉருவாக்கி கொள்ளலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|