பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? ...  பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம் பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இதுவும் கடந்து போகும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2020
00:11

பங்குச் சந்தைகள் விழுவதும், எழுவதும் புதிதல்ல! காலம் மாற மாற, சந்தை இன்னும் அதிக ஏற்ற, இறக்கங்களை நமக்கு தருகிறது. புள்ளி அளவிலும் சரி, சதவீத அளவிலும் சரி, சந்தையில் நாம் காணும் தினசரி மாற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.


ஏற்றம் காணும்போது நமக்கு உற்சாகமூட்டும் இந்த மாற்றங்கள், இறக்கம் காணும்போது நமக்குள் பீதியை ஊட்டுவதும் உண்டு. கடந்த இரண்டு வாரங்கள், தொடர்ந்து பீதியை ஊட்டிய காலகட்டமாக அமைந்தன. அந்த அச்சத்தின் உச்சமாக, வெள்ளியன்று, பங்குச் சந்தைகளின் குறியீடான, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' 10 சதவீதம் வீழ்ச்சி கண்டு, சந்தையை, 45 நிமிடத்திற்கு மூடச் செய்தன. இது, அசாதாரண அச்சத்தின் வெளிப்பாடு என்று அனைவரும் அறிவர்.

பேராசை
ஆனாலும், அப்படி நடக்கும் போது, எத்தனை பேருக்கு பங்குகளை வாங்கத் தைரியம் வரும்? அதே சமயம், 2009ல், தேர்தல் முடிவு அறிவிப்பு வந்த பின், இதே குறியீடுகள், 10 சதவீதம் உயர்ந்து, சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்ட போது, நாம் எப்படி நடந்து கொண்டோம்? சந்தை ஒரே நாளில், 10 சதவீதம் ஏறினால் பேராசைப்படுவதும், 10 சதவீதம் சரிந்தால் அச்சப்படுவதும், முதலீட்டாளர்களின் பொதுவான இயல்பு.

ஆனால், இந்த இயல்புக்கு மாறாக, நாம் எப்படி நடக்கிறோம் என்பது தான், நம்மை முதலீடு வெற்றி நோக்கி கொண்டு செல்லும். நேற்று கண்ட பதற்றம், சமீபகால அச்சங்களின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய உச்ச அச்சம் குறையும்போது, சந்தை, குறுகிய காலத்தில் மீண்டும் உயரும்.எல்லாரும் மீண்டும் அச்சம் நீங்கி, கவலையில் இருந்து மீண்டு வருவர். ஆனால், இந்த மனமாற்றம் நிலைத்து நிற்க, பல பொருளாதார ஆதாரங்கள் தொடர்ந்து உதவ வேண்டும்.


இப்போது இருக்கும் வைரஸ் சார்ந்த நிலையாமை, அத்தகைய ஆதாரங்கள் வெளிப்
படுவதற்கு கூட உதவாது. ஆகவே, இனி தொடர்ந்து வரும் பொருளாதார குறியீடுகள், உலகத்தில் மீண்டும் சகஜ நிலை திரும்புவதை உறுதி செய்ய, கால அவகாசம் தேவை. வரும் காலாண்டுகளில், முதலில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் முடங்கியவற்றின் நடமாட்டம் திரும்ப வேண்டும். மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு வர வேண்டும்.

இப்போது, அன்னிய நாடுகளில் இருந்து, அவரவர் சொந்த நாடுகளுக்கு நடக்கும் பண வரத்துகள் திசை மாறி, மீண்டும் முதலீட்டில் அதிக லாபம் வரும் நாடுகளில் உயர வேண்டும்.இப்படி பல தொடர் நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்பதை, முதலில் நாம் மனதில் கொள்வோம். ஒவ்வொரு நாட்டின் அரசும், பொருளாதார வளர்ச்சி திரும்ப, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இயல்பு நிலை

இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற தெளிவும், அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்தப் போகும் தாக்கமும் தெளிவாக நமக்கு வெளிப்பட வேண்டும். அச்சம் உச்சம் தொட்டு விட்டது என்று உறுதி செய்து கொள்வது தான், முதலீட்டுப் பயணத்தின் அடுத்த கட்டம். அதன் நீட்சியாக, பொருளாதார இயல்பு நிலை திரும்ப வேண்டும்.

'கொரோனா' வைரசின் தாக்கம் குறைய வேண்டும். உலகில், பொருட்கள், பணம் மற்றும் மக்கள் நடமாட்டம் ஆகியவை பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். நிறுத்தப்பட்ட வர்த்தகம் மீண்டும் வளர வேண்டும்.பங்குச் சந்தைகள் இவற்றை எல்லாம் தன்னுடைய எதிர்பார்ப்பு களின் கணக்கில் எடுத்துக் கொள்வது தான், நிலையான முதலீட்டுச் சூழலை மீண்டும் உருவாக்கும்.

இப்போதைக்கு, நாம் அச்சத்தை நிதானமாக எதிர்கொண்டு, அடுத்த கட்டம் நோக்கி கவனமாக பயணிப்போம். இதுவும் கடந்து போகும்!

ஷ்யாம் சேகர்,முதலீட்டு ஆலோசகர்

shyamsek@ithought.co.in

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)