பதிவு செய்த நாள்
17 மார்2020
04:00
மும்பை: உலக சந்தைகளில், ‘கொரோனா’ வைரஸ் குறித்த அச்சத்தால், சரிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று, இந்திய பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன.
வாரத்தின் முதல் நாளான நேற்று, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 2713.41 புள்ளிகளை இழந்தது. அதாவது, 7.96 சதவீதம் குறைந்து, வர்த்தகத்தின் இறுதியில், 31390.07 புள்ளிகளில் நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 7.61 சதவீதம் சரிவைக் கண்டு, 9,200 எனும் நிலையிலிருந்து சரிந்துவிட்டது.
நிப்டி, 757.80 புள்ளிகளை இழந்து, வர்த்தகத்தின் இறுதியில், 9,197.40 புள்ளிகளில் நிலைபெற்றது.அனைத்து நிறுவன பங்குகளுமே நேற்று சரிவைக் கண்டன. அவற்றில், இண்டஸ்இண்ட் பேங்க் அதிகபட்ச இழப்பை சந்தித்தது. இதையடுத்து, டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ், ஐ.டி.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவைக் கண்டன.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக செய்தி வந்ததும், சந்தையின் ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்ததாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.இந்திய சந்தைகளில் மட்டுமின்றி, உலகளாவிய சந்தைகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தில், 8 சதவீத சரிவை சந்தித்தன. நேற்று சந்தையின் துவக்கத்தில், சென்செக்ஸ் சரிவை அடுத்து, முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பில், 7.6 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|