பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம் பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம் ... தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆட்டிப் படைக்கும் வைரஸ்; ஆடிப்போன சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
04:00

மும்பை: உலக சந்தைகளில், ‘கொரோனா’ வைரஸ் குறித்த அச்சத்தால், சரிவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று, இந்திய பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன.

வாரத்தின் முதல் நாளான நேற்று, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 2713.41 புள்ளிகளை இழந்தது. அதாவது, 7.96 சதவீதம் குறைந்து, வர்த்தகத்தின் இறுதியில், 31390.07 புள்ளிகளில் நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 7.61 சதவீதம் சரிவைக் கண்டு, 9,200 எனும் நிலையிலிருந்து சரிந்துவிட்டது.

நிப்டி, 757.80 புள்ளிகளை இழந்து, வர்த்தகத்தின் இறுதியில், 9,197.40 புள்ளிகளில் நிலைபெற்றது.அனைத்து நிறுவன பங்குகளுமே நேற்று சரிவைக் கண்டன. அவற்றில், இண்டஸ்இண்ட் பேங்க் அதிகபட்ச இழப்பை சந்தித்தது. இதையடுத்து, டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ், ஐ.டி.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான சரிவைக் கண்டன.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக செய்தி வந்ததும், சந்தையின் ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்ததாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.இந்திய சந்தைகளில் மட்டுமின்றி, உலகளாவிய சந்தைகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆசிய சந்தைகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தில், 8 சதவீத சரிவை சந்தித்தன. நேற்று சந்தையின் துவக்கத்தில், சென்செக்ஸ் சரிவை அடுத்து, முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பில், 7.6 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)