பதிவு செய்த நாள்
18 மார்2020
04:32
புதுடில்லி : கடந்த ஏப்ரல் முதல், பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 8.86 சதவீதம் குறைந்துவிட்டது.
இது குறித்து, வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல், பிப்ரவரி வரையிலான காலத்தில், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, இது, 8.86 சதவீதம் குறைவாகும்.கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், தங்கத்தின் இறக்குமதி, 2,962 கோடி டாலராக இருந்தது. இதன் இந்திய மதிப்பு, 2.19 லட்சம் கோடி ரூபாய்.நாட்டின் தங்கம் இறக்குமதி, வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
நடப்பு நிதியாண்டில், தங்கம் இறக்குமதி குறைந்து உள்ளதால், வர்த்தகப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், பிப்ரவரி வரையிலான காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 1.06 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில், இதே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை, 1.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்தே, தங்கம் இறக்குமதி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|