வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் ‘மூடிஸ்’ நிறுவனம் அறிவிப்பு வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் ‘மூடிஸ்’ நிறுவனம் அறிவிப்பு ...  ஏறிய சந்தையை இறக்கிய அச்சம் ஏறிய சந்தையை இறக்கிய அச்சம் ...
வெளிநாடுகளில் முதலீடு பிப்ரவரியில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2020
04:38

மும்பை : உள்நாட்டு நிறுவனங்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடுகள், 2.37 பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 17 ஆயிரத்து, 538 கோடி ரூபாய் என, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில், 17 ஆயிரத்து, 538 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மேற்கொண்டு உள்ளன.இதுவே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியநிறுவனங்கள் செய்த முதலீடு, 17 ஆயிரத்து, 464 கோடி ரூபாய். கடந்த ஜனவரி மாதத்தில் செய்த முதலீடு, 16 ஆயிரத்து, 502 கோடி ரூபாய்.கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில், 8,584 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டதாகும்.

மேலும், 4,959 கோடி ரூபாய் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது. 3,986 கோடி ரூபாய், பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், டாடா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள், அதிகளவு முதலீடு செய்து உள்ள நிறுவனங்களாகும். இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)