பதிவு செய்த நாள்
18 மார்2020
04:42
மும்பை : நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் களில் சிக்கிய ‘யெஸ் பேங்கை’ மீட்டு எடுக்கும் முயற்சியில், எஸ்.பி.ஐ., தலைமையில், பல நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன.
இதையடுத்து, இன்று மாலை, 6:00 மணி முதல், யெஸ் பேங்க் மீதான தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும், வங்கியின் வழக்கமான செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சிகள் ஒரு புறமிருந்தாலும், வங்கியின் டெபாசிட்தாரர்கள் என்ன முடிவு செய்திருக்கின்றனர் என்பதை பொறுத்துதான், வங்கியின் எதிர்காலம். வங்கியின் புதிய நிர்வாகத்தை அவர்கள் ஏற்று, தொடர்ந்து வங்கியோடு இணைந்திருப்பாரா அல்லது வெளியேறிவிடுவரா என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
யெஸ் பேங்கில் சேமிப்பு கணக்கு, நடப்புக்கணக்கு, வைப்புத் தொகை கணக்கு ஆகியவற்றில் டெபாசிட்தாரர்கள், 1.65 லட்சம் கோடி ரூபாயை வைத்துள்ளனர்.இதில், 1.12 லட்சம் கோடி ரூபாயை வைப்புத் தொகையாக வைத்திருக்கின்றனர். 29, ஆயிரத்து, 764 கோடி ரூபாயை சேமிப்பு கணக்கிலும், 23 ஆயிரத்து, 440 கோடி ரூபாயை நடப்பு கணக்கிலும் வைத்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், சிறிய அளவிலான தொகை வெளியேறி இருக்கலாம்.
ஆனால், தடை நீக்கத்துக்குப் பிறகு என்ன ஆகும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள், டெபாசிட்தாரர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு, புதிய நிர்வாகம் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், டெபாசிட்தாரர்கள் மன நிலையை பொறுத்ததே, வங்கியின் எதிர்காலம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|