பதிவு செய்த நாள்
19 மார்2020
03:38
புதுடில்லி: வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும், அடுத்த நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘பிட்ச் சொலுஷன்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் அதிகரித்து, 5.4 சதவீதமாக இருக்கும் என உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து, பிட்ச் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:அடுத்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதற்கு முன், 0.40 சதவீதம் குறைக்கப்படும் என மதிப்பிட்டிருந்தோம்.பணவீக்கம் குறைந்து, ரிசர்வ் வங்கியின் சவுகரிய நிலைக்கு வரும் வாய்ப்பிருப்பதை அடுத்து, பொருளாதார வளர்ச்சியை துாண்டும் வகையில், வட்டி குறைப்புக்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|