எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு  பிப்ரவரியில் 5.2 சதவீதம் அதிகரிப்பு எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு பிப்ரவரியில் 5.2 சதவீதம் அதிகரிப்பு ...  மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு: ‘சென்செக்ஸ்’ 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு: ‘சென்செக்ஸ்’ 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே ... ...
திருப்பூர் பின்னலாடை துறை ‘கொரோனா’வால் கோடிகளில் இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
03:44

திருப்பூர்: ‘கொரோனா’ அச்சுறுத்தலால், திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சாயமேற்றுதல், பிரின்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட சேவைகளுக்காக, இங்குள்ள, ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு வழங்கிய, ‘ஆர்டர்’களை, ஆடை நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் கூறிய தாவது:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியில், 70 சதவீதம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது. கொரோனாவால், இவ்விரு நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை; ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அனுப்பிய ஆடைக்கான தொகை வழங்குவதை, வெளிநாட்டு வர்த்தகர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இஸ்ரேல், துபாய் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.திருப்பூரில் இருந்து மாதந்தோறும், 2,500 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.கொரோனாவால்,

ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆடைகளுக்கான தொகை, கிடைப்பதில் காலதாமதம், ஆர்டர் இழப்பு என, மொத்தம், 5,000 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிக் கடன்களை செலுத்துவதற்கு, மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)