பதிவு செய்த நாள்
19 மார்2020
03:44
திருப்பூர்: ‘கொரோனா’ அச்சுறுத்தலால், திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சாயமேற்றுதல், பிரின்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட சேவைகளுக்காக, இங்குள்ள, ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களுக்கு வழங்கிய, ‘ஆர்டர்’களை, ஆடை நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் கூறிய தாவது:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியில், 70 சதவீதம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது. கொரோனாவால், இவ்விரு நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை; ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அனுப்பிய ஆடைக்கான தொகை வழங்குவதை, வெளிநாட்டு வர்த்தகர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இஸ்ரேல், துபாய் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது.திருப்பூரில் இருந்து மாதந்தோறும், 2,500 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.கொரோனாவால்,
ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆடைகளுக்கான தொகை, கிடைப்பதில் காலதாமதம், ஆர்டர் இழப்பு என, மொத்தம், 5,000 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிக் கடன்களை செலுத்துவதற்கு, மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|