திருப்பூர் பின்னலாடை துறை  ‘கொரோனா’வால் கோடிகளில் இழப்பு திருப்பூர் பின்னலாடை துறை ‘கொரோனா’வால் கோடிகளில் இழப்பு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு: ‘சென்செக்ஸ்’ 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
03:47

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 1,700 புள்ளிகள் சரிந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும், முதலீட்டாளர்கள், 15.72 லட்சம் கோடி ரூபாயை இழந்துஉள்ளனர். நேற்று சென்செக்ஸ், 1,709 புள்ளிகள் குறைந்து, வர்த்தக இறுதியில், 28869.51 புள்ளிகளாக சரிந்தது. கடந்த, 2017ம் ஆண்டு ஜனவரிக்கு பின், முதன் முறையாக, 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது.நம்பிக்கை சரிவுஇதே போல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், 498.25 புள்ளிகள் குறைந்து, 8468.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் பேங்க் அதிக இழப்பைச் சந்தித்தது. இந்நிறுவன பங்குகள் விலை, 23 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது. இதையடுத்து, பவர்கிரிட், கோட்டக் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., பேங்க், என்.டி.பி.சி., ஆகிய நிறுவனப் பங்கு களும் விலை சரிவை சந்தித்தன.ஓ.என்.ஜி.சி., மற்றும் ஐ.டி.சி., நிறுவனப் பங்குகள் மட்டுமே, இப்பிரிவில் விலை உயர்வை சந்தித்தன.துவக்கத்தில் சந்தைகள் உயர்ந்த போதும், பொருளாதார நிலை குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவால், அந்த உயர்வை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

யெஸ் பேங்க்குறிப்பாக, எஸ்., அண்டு பி., ரேட்டிங்ஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, நடப்பு ஆண்டில், 5.2 சதவீதமாக குறைத்தது மற்றும் உலக பொருளாதாரம், கொரோனா வைரஸ் தாக்குதலால், மந்தநிலைக்குள் செல்கிறது என அறிவித்தது ஆகியவை, சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை குறித்த அவற்றின் சுயமதிப்பீட்டு கணக்கை, உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து, இத்துறை சார்ந்த பங்குகள் விலை வீழ்ச்சியை சந்தித்தன.வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள், 34.85 சதவீதம் சரிந்தன.

பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள், 6.14 சதவீதம் சரிந்தன.யெஸ் பேங்க் பங்குகள், வர்த்தகத்தின் இடையே, 49.95 சதவீதம் அதிகரித்த போதும், வர்த்தகம் முடிவில், 3.67 சதவீதம் உயர்வுடன் முடிந்தது.இந்நிறுவனப் பங்குகள், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 142 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)