பதிவு செய்த நாள்
20 மார்2020
04:30
புதுடில்லி: ‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனத்தின், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான வேணு ஸ்ரீனிவாசன், அதே பதவியில் மேலும் தொடர்ந்து பணியாற்ற, நிறுவனத்தின் பங்கு தாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ள வேணு ஸ்ரீனிவாசன், இப்பதவியில் மேலும், ஐந்து ஆண்டுகள் தொடர்வதற்கான ஒப்புதலை, நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குதாரர்கள் வழங்கி இருக்கின்றனர்.
இதையடுத்து, வேணு ஸ்ரீனிவாசன், வரும் ஏப்ரல், 24ம் தேதியிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த பொறுப்பை வகிப்பார்.சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து, அஞ்சல் ஓட்டு மூலம், பங்குதாரர்களின் ஒப்புதல் கோரப்பட்டது.
இதையடுத்து, பெரும்பாலான பங்குதாரர்கள், அவர் மேலும், ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் தொடர, தங்களின் ஒப்புதலை வழங்கி உள்ளனர்.இவ்வாறு, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|