பதிவு செய்த நாள்
20 மார்2020
04:31
நிறுவனங்கள், நான்காவது காலாண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புகள் காரணமாக, 45 நாட்கள் கூடுதல்அவகாசத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது. ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதை அடுத்து, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கி, 10 ஆயிரம் கோடி ரூபாய்முதலீட்டை நிதிச் சந்தையில் மேற்கொள்கிறது.‘பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்’நிறுவனம், இரண்டே நாட்களில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை மேலும் குறைத்து, நடப்பு நிதியாண்டில், 4.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.முகேஷ் அம்பானி, அவரது மனைவி,குழந்தைகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின்எண்ணிக்கையை, அதிகரித்துக் கொண்டனர்.பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், நேற்றையவர்த்தகத்தின் துவக்கத்தில், 7 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.கொரோனா பாதிப்பு காரணமாக, ‘இண்டிகோ’ நிறுவனம், 16 விமானங்களை தரையிறக்குகிறது. மேலும், ஊழியர்களின் ஊதியத்தில், 10 முதல், 20 சதவீதத்தை குறைக்க உள்ளது.***
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|