வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ... ‘ஏர் இந்தியா’வில் முதலீடு வெளிநாடுவாழ் இந்தியருக்கு சலுகை ‘ஏர் இந்தியா’வில் முதலீடு வெளிநாடுவாழ் இந்தியருக்கு சலுகை ...
குபீர் குண்டு போடும் சுற்றுலா துறையினர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2020
04:33

புதுடில்லி: ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புகளால்,இந்தியாவில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் மட்டும், 3.8 கோடி பேர், வேலை இழப்பை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக, ‘பெய்த்’ எனும், இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலை குறித்து, இந்த கூட்டமைப்பு, பிரதமர் மோடிக்கு கடிதமும்எழுதியுள்ளது.இது குறித்து இவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது:கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளால், இந்தியாவில் உள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்தவர்களில், 70 சதவீதம் பேர் வேலை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வருவாய் குறைவுஇத்துறையில், 5.5 கோடி பேர் பணியாற்று கின்றனர். இதில், 70 சதவீதம் என்பது கிட்டத்தட்ட, 3.8 கோடி பேர். இவர்கள் நேரடி மற்றும் மறைமுக பணியாளர்கள் ஆவர்.இந்த நோய் தொற்று காரணமாக, சுற்றுலா துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள், கடனை செலுத்த முடியாத நிலைக்கு சென்று, திவாலாக வாய்ப்பிருக்கிறது.

மேலும், பல வணிகங்கள் மூடப்பட்டு, அவற்றில் பணி புரிபவர்கள் வேலை இழப்பை சந்திக்கும் நிலையும் ஏற்படும் என தெரிகிறது.

ஏற்கனவே, பல இடங்களில், வேலை இழப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் துவங்கி விட்டன.வருவாய் குறையத் துவங்கி இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா வணிகங்களும் போதுமான மூலதனமின்றி தவிக்கத் துவங்கி உள்ளன.இருப்பினும், ஊழியர்களுக்கு சம்பளம், அட்வான்ஸ் வரி, சேமநல நிதி, ஜி.எஸ்.டி., என, பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதுள்ளது.

மேலும், மாநில அரசுகளுக்கும் வரி, மின்சார கட்டணம் என பல வகைகளில் பணம் செலுத்த வேண்டியதிருக்கிறது. இவற்றை செலுத்துவதிலிருந்து, 12 மாத அவகாசம் தேவைப்படுகிறது.தேவை அவகாசம்மேலும், வங்கிக் கடனுக்கான தவணையை செலுத்துவதில், அசலுக்கும் வட்டிக்கும், 12 மாத நிவாரணம் வழங்க வேண்டும். நிதி நிறுவனங்கள் மூலமாக, நடைமுறை மூலதன தேவைகளுக்கான நிதி கிடைப்பதற்கும் உதவ வேண்டும்.கூடவே, இத்துறைக்கு உதவும் வகையில், நிதியம் ஒன்றை அமைத்து, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், அடிப்படை சம்பளத்தை, 12 மாதங்களுக்கு, நேரடியாக அவர்களுக்கு வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகள், பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., செலுத்துவதிலிருந்து, ஓராண்டுக்கு இத்துறையினருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இவ்வாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)